இஞ்சி ரசம்

இஞ்சி ரசம்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



சளி, இருமல், காய்ச்சல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசத்தை வைத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

புளி - ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி - ஒன்று

அரைக்க

இஞ்சி - இரண்டு அங்குல துண்டு
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
முழு தனியா - ஒரு மேசை கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
கொத்துமல்லி தழை - கால் கைபிடி அளவு
கறிவேப்பிலை - கால் கைபிடி அளவு

தாளிக்க

நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை அளவு

செய்முறை

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போடு அரைத்து கொள்ளவும்.

தக்காளி, புளி தண்ணீருடன் உப்பு, அரைத்தது சேர்த்து மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

சுவையான கம கம இஞ்சி ரசம் ரெடி!

குறிப்பு

1. பூண்டு தேவை படுபவர்கள் இரண்டு பற்கள் சேர்த்து கொள்ளலாம்.

2. சளி தொந்தரவிற்கு மிகவும் நல்லது குளிர்காலங்களில் அடிக்கடி செய்து சாப்பிடலம்.



3. குழந்தைகளுக்கு சளி, இருமல் இருக்கும் போது இஞ்சி சாறு கொடுக்க முடியாது அதற்கு இப்படி ரசம் செய்து சாத்த்தில் பிசைந்து கொடுக்கலாம்.

பொட்டேடோ ஸ்மைலி

ஸ்நாக்ஸ் பொட்டேடோ ஸ்மைலி


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

         குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் பொட்டேடோ ஸ்மைலி

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான பொட்டேடோ ஸ்மைலி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - கால் கிலோ,
பிரெட் க்ரம்ஸ் - 3½ டீஸ்பூன்,
கார்ன் ஃப்ளார் - 3 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு,
செடார் சீஸ் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

ஸ்மைலி செய்ய...

ஸ்பூன் - 1,
ஸ்ட்ரா - 1,
ரவுண்ட் கட்டர்- 1.

செய்முறை :

உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பிரெட் க்ரம்ஸ், கார்ன்ஃப்ளார், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீஸ் சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

பிசைந்த மாவில் பெரிய உருண்டையாக எடுத்து அதை நன்றாக உருட்டி கொள்ளவும்.

பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது எண்ணெய் தேய்த்து நடுவில் மாவை வைத்து மூடி சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி போல தடியாக தேய்க்க வேண்டும்.

பின்னர் ரவுண்ட் கட்டர் கொண்டு வெட்டி ஸ்ட்ரா கொண்டு கண்கள் போல் இரண்டு ஓட்டை போட வேண்டும்.

அடுத்து வாய்க்கு ஸ்பூனால் வரைய வேண்டும்.

இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து ஸ்மைலிகளை போட்டு பொரித்தெடுத்து டொமேட்டோ கெட்சப் உடன் பரிமாறவும்.

சூப்பரான பொட்டேடோ ஸ்மைலி ரெடி.

குறிப்பு: ஸ்மைலிகளை சிப்லாக் பேக் அல்லது பாக்ஸில் போட்டு மூடி ஃப்ரீசரில் வைத்து தேவைப்படும் பொழுது எடுத்து அதிக சூடான எண்ணெயில்  பொரித்தெடுத்து கொள்ளலாம்.

ஹனி சில்லி பொட்டேடோ

சூப்பரான ஹனி சில்லி பொட்டேடோ


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஹனி சில்லி பொட்டேடோ. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 250 கிராம்,
உப்பு - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - 2 கப்,
அரிசி மாவு - 5½ டீஸ்பூன்,
மைதா, எண்ணெய் - தலா 5 டீஸ்பூன்,
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
வெள்ளை எள் - 3½ டீஸ்பூன்,
நறுக்கிய பூண்டு - 3 பல்,
பச்சைமிளகாய் - 3,
வெங்காயம் - 1/2,
குடைமிளகாய் - 1/4,
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
ரெட் சில்லி சாஸ், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
டொமேட்டோ கெட்சப், தேன் - தலா 2 டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன் தண்ணீர்,
ஸ்பிரிங் ஆனியன் - சிறிது.

செய்முறை :

உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளமாக நறுக்கிய கொள்ளவும்.

ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

குடைமிளகாய், ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு 10 நிமிடம் வேகவைத்து வடித்துக் கொள்ளவும்.

இந்த உருளைக்கிழங்குடன் அரிசி மாவு, மைதா தலா 1 டீஸ்பூன் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.

மற்றொரு கிண்ணத்தில் மீதியுள்ள அரிசி மாவு, மைதா, உப்பு சேர்த்து தண்ணீர்  ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

இந்த மாவில் உருளைக்கிழங்கை முக்கியெடுத்து மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

வெறும் கடாயில் 2½ டீஸ்பூன் எள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, பச்சைமிளகாய், எள் 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கிய பின்னர் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, சர்க்கரை, சோயாசாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள், டொமேட்டோ கெட்சப், தண்ணீர்  ஊற்றி கொதித்ததும், கரைத்த கார்ன்ஃப்ளார் கலவை ஊற்றி கெட்டியானதும் ஸ்பிரிங் ஆனியன், வறுத்த உருளைக்கிழங்கு, தேன் சேர்த்து கிளறி கடைசியாக வறுத்த எள்ளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.



சூப்பரான ஹனி சில்லி பொட்டேடோ ரெடி.

வெஜிடபிள் ஸ்டப்ஃடு பூரி

வெஜிடபிள் ஸ்டப்ஃடு பூரி

சூப்பரான வெஜிடபிள் ஸ்டப்ஃடு பூரி


   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு லஞ்சுக்கு கொடுத்து அனுப்ப காய்கறிகள் சேர்த்து மசாலா பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், பச்சை பட்டாணி - கலந்து பொடியாக நறுக்கியது ஒரு கப்.
பெரிய வெங்காயம் - இரண்டு
கோதுமை மாவு - கால் கிலோ
புளிப்பு இல்லாத தயிர் - தேவையான அளவு
பச்சை மிளகாய் - இரண்டு.
இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்.
சீரகம் - அரை டீஸ்பூன்.
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்.
மஞ்சள்தூள் - தேவையான அளவு.
எலுமிச்சை சாறு - சிறிது.
எண்ணெய் - பொரிக்க
நெய் - இரண்டு ஸ்பூன்.

செய்முறை :

ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கால் கிலோ கோதுமை மாவுடன் மூன்று ஸ்பூன் நெய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து புளிப்பு இல்லாத தயிர் ஊற்றி தண்ணீர் ஊற்றாமல் தயிரிலேயே சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும் பச்சை மிளகாய் வெங்காயம் போட்டு வதங்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.

அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதங்கியதும் சிறிது தண்ணீர் தெளித்து தேவையான உப்பு போட்டு காய்கறி கலவை ஓரளவு கெட்டியாகி வந்ததும் கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.

பிறகு பிசைந்த மாவை சப்பாத்திகளாய் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு சப்பாத்தியின் மேல் இரண்டு அங்குல இடைவெளி விட்டு ஒரு ஸ்பூன் மசாலா வைத்து அந்த பூரியின் மேல் இன்னொரு பூரியை வைத்து மூடி ஓரங்களை நன்றாக ஒட்டி சில்வர் டப்பா மூடியால் மசாலா இருக்கும் இரண்டு இடங்களையும் வட்டமாக வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து பூரிகளை பொரித்தெடுக்கவும்.

வெஜிடபிள் ஸ்டப்ஃடு பூரி ரெடி.



குறிப்பு: இது குழந்தைகளின் ஸ்கூல் லஞ்சிற்கு மிகவும் அருமையான டிஷ்.

தேங்காய் சம்பல்

தேங்காய் சம்பல்
சப்பாத்திக்கு அருமையான தேங்காய் சம்பல்


   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளவும், சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும் இந்த தேங்காய் சம்பல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

துருவிய தேங்காய் - ஒரு கப்
சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு.
வரமிளகாய் - நான்கு
உப்பு  - தேவையான அளவு.
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி.
கடுகு உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து.

செய்முறை :

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் வரமிளகாய் உப்பு போட்டு ஒரு சுற்று சுற்றி மசிந்ததும் அதோடு துருவிய தேங்காயை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும்

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் உள்ள ஒன்றிரண்டாக அரைத்த தேங்காயை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கவும்.

சூப்பரான தேங்காய் சம்பல் ரெடி.

குறிப்பு: இது சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும். சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம். 

செட்டிநாடு மிளகாய் சட்னி

செட்டிநாடு மிளகாய் சட்னி

இட்லிக்கு அருமையான செட்டிநாடு மிளகாய் சட்னி


   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த செட்டிநாடு மிளகாய் சட்னி சூப்பரான இருக்கும். இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 2
வரமிளகாய் - 5
பூண்டு - 3
புளி - 1 இன்ச்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு :

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் பூண்டு, புளி, வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, உப்பு தூவி மீண்டும் 2 நிமிடம் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றினால், செட்டிநாடு மிளகாய் சட்னி ரெடி!!

புளிக்கு பதிலாக தக்காளியையும் பயன்படுத்தலாம்.

வெஜிடபிள் ரைஸ் கட்லெட்

வெஜிடபிள் ரைஸ் கட்லெட்
சூப்பரான ஸ்நாக்ஸ் வெஜிடபிள் ரைஸ் கட்லெட்


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சாதம், காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த இரண்டையும் சேர்த்து கட்லெட் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நன்கு வேகவைத்த சாதம் - ஒன்றரை கப்
உருளைக்கிழங்கு - ஒன்று
குடைமிளகாய் (நறுக்கியது) - 2 டீஸ்பூன்
வேகவைத்து, மசித்த கேரட், பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை -  சிறிதளவு
வெங்காயம் - 1
எண்ணெய் - 4 டீஸ்பூன்
பிரெட் தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை :

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சாதத்தை நன்றாக மசித்துக்கொள்ளவும் (அரைக்க வேண்டாம்; கையால் மசித்தால் போதும்).

கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, அதில் வேகவைத்த சாதம், மசித்த உருளைக்கிழங்கு, காய்கறி, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து மேலும் வதக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கி, ஆறியதும் கையால் நன்றாகப் பிசைந்து விரும்பிய வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்யவும்.

லேசாக பிரெட் தூளில் புரட்டி எடுத்து வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அதில் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து எடுத்து, லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்பவும்.

சூப்பரான சூப்பரான ஸ்நாக்ஸ் வெஜிடபிள் ரைஸ் கட்லெட் ரெடி.



ஒரு கைப்பிடி சாதம்கூட சாப்பிடாத குழந்தைகளை ஒரு கப் சாதம் சாப்பிட வைக்க இது எளிய முறை. சாதம், காய்கறிகள் எல்லாம் இதனுள்ளேயே இருப்பதால் தேவையான சத்தும் கிடைக்கும்.

நாரத்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

நாரத்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. இன்று நாரத்தங்காய் வைத்து சுவையான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :      

நாரத்தங்காய் - 3,  
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், 
வெந்தயம் - அரை டீஸ்பூன்,  
காய்ந்த மிளகாய் - 8,  
கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்,  
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், 
உப்பு - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :     

நாரத்தங்காயை நன்றாக கழுவிய துடைத்த பின்னர் துண்டுகளாக வெட்டி விதைகளை நீக்கி விடவும்.

வெட்டிய நாரத்தங்காய் துண்டுகளை ஜாடியில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும். 

இதை பத்து நாள்கள் வரை தினமும் கிளறிவிடவும். 

வெறும் வாணலியில் வெந்தயம், காய்ந்த மிளகாயைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். 

நன்கு ஊறிய நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 

வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு : நாரத்தங்காய் ஊறுவதற்கு 10 நாள்களாகும். தேவைப்படும்போது தாளித்துக்கொண்டால் ஊறுகாய் ஃப்ரெஷ்ஷாகவும், மேலும் சுவையாகவும் இருக்கும்.

சேனைக்கிழங்கு கடைசல் - நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்

சேனைக்கிழங்கு கடைசல் - நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்
நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் சேனைக்கிழங்கு கடைசல்


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு - கால் கிலோ
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி அல்லது குழம்பு மசாலா - ஒன்னரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
மல்லி கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு.
நறுக்கிய வெங்காயம் – 1 கப்

செய்முறை:

முதலில் சேனைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி எடுக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். குக்கரில் சேனைக்கிழங்கு,அரிசி கழனி ஒரு கப், சிறிது உப்பு சேர்த்து மூன்று விசில் வேகவைத்து எடுத்த பின்பு தண்ணீர் வடிகட்டி மசித்து விடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். அத்துடன் புளித்தண்ணீர் சேர்க்கவும்.மஞ்சள் தூள்,சாம்பார் அல்லது குழம்பு மசாலா பொடி சேர்க்கவும். நன்கு கொதித்ததும் மசித்த சேனைக்கிழங்கை சேர்த்து கலந்து விடவும்.அடுப்பை சிறிதாக வைத்து நன்றாக ஒரு சேர கொதித்ததும் நறுக்கிய மல்லி இலை சேர்த்து இறக்கவும்.