பாசிப்பருப்பு வடை

பாசிப்பருப்பு வடை

தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பைத் தண்ணீர் விட்டு ஊறவைத்து, தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் உப்பு சேர்த்துக் கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். இதனுடன் பச்சரிசி மாவு, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிற மாகப் பொரித்து எடுக்கவும்.

தால் கிரேவி

தால் கிரேவி

தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பூண்டு - 6 பற்கள், எண்ணெய் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பைக் கழுவி குக்கரில் போட்டு, இரண்டு கப் தண்ணீர், மஞ்சள்தூள், கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை அதனுடன் சேர்த்து, குக்கரை மூடி, மூன்று விசில் விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... சீரகம், தட்டிய பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பொரிந்ததும் வேகவைத்த பருப்பை சேர்க்கவும். பின்னர் தேவையான உப்பை சேர்த்துக் கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பாசிப்பருப்பு இட்லி

பாசிப்பருப்பு இட்லி

தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தயிர் - அரை கப், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பைத் தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். கடுகு, பெருங்காயத்தூள், நறுக்கிய பச்சை மிளகாயை எண்ணெயில் தாளித்து அரைத்த பாசிப்பருப்புடன் சேர்க்கவும். இதனுடன் சமையல் சோடா, தயிர், தேங்காய்த் துருவல், உப்பு ஆகிய வற்றை சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

இலங்கை ரொட்டி

இலங்கை ரொட்டி

தேவையானவை:

மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த் துருவல் - அரை கப், தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கவும். தேங்காய்த் துருவல், மைதா மாவு, பச்சை மிளகாய். உப்பு ஆகிய வற்றுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, கனமாக தட்டி, சூடான தோசைக்கல்லில் போடவும். இரு பக்கமும் எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்து, சைட் டிஷ் உடன் பரிமாறவும்.

ஆரஞ்சு டீ

ஆரஞ்சு டீ

தேவையானவை:

டீ பை (டீ பேக்) - ஒன்று, ஆரஞ்சு சாறு - ஒரு கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - ஒரு கப், ஐஸ்கட்டிகள் - அரை கப், புதினா இலை - 3, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

தண் ணீரைக் கொதிக்க வைத்து... சர்க்கரை, புதினா, டீ பையை போட்டு, சாறு இறங்கியதும் வடிகட்டி ஆறவைக்கவும். ஒரு கிளாஸில் ஐஸ் கட்டிகளை போட்டு... டீ, ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பருகவும்.

வாட்டர் மெலன் ஸ்லஷ்

வாட்டர் மெலன் ஸ்லஷ்

தேவையானவை:

தர்பூசணி துண்டுகள் - 2 கப், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களை யும் ஒன்றாக சேர்த்து அடித்து, `திக்’காக பரிமாறவும்.

லெமன் - கோரியண்டர் ரைஸ்

லெமன் - கோரியண்டர் ரைஸ்

தேவையானவை:

பாசுமதி அரிசி - ஒரு கப், தண்ணீர் - ஒன்றரை கப், பச்சை மிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - 3 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடு செய்து... பொடி யாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்க்கவும். தண்ணீரை வடிகட்டி அரிசியை சேர்க்கவும். 2 நிமிடம் அதிக தீயில் அடிபிடிக்காமல் கிளறவும். பிறகு, தீயைக் குறைத்து எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். இடையில் கிளறவும். அரிசியை மலர வேகவைத்து எடுக்கவும்.

பிரெஞ்சு டோஸ்ட்

பிரெஞ்சு டோஸ்ட்

தேவையானவை:

பிரெட் - 6 ஸ்லைஸ், கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், பால் - அரை கப், வெண்ணெய் (அ) நெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:

காய்ச்சி ஆற வைத்த பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து, சர்க்கரையும் சேர்த்து, கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும். நான் ஸ்டிக் பேனில் வெண்ணெய் (அ) நெய்யை சூடாக்கி... பிரெட்டை பால் கலவையில் தோய்த்து உடனடியான `பேனில்’ போடவும். இருபுறமும் சிவக்க ரோஸ்ட் செய்யவும்.

குறிப்பு: கஸ்டர்ட் பவுடருக்குப் பதிலாக சோள மாவும், வெனிலா எசன்ஸும் சேர்க்கலாம்.

சைனீஸ் ஃப்ரைடு ரைஸ்

சைனீஸ் ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை:

பாசுமதி அரிசி - ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கோஸ் - ஒரு கப், குடமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, பூண்டு - 3 பற்கள், வெங்காயத்தாள் - ஒரு கட்டு (நறுக்கவும்), சோயா சாஸ் - 2 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

கோஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். சிறிதளவு வெங்காயத்தாளை தனியே எடுத்து வைக்கவும். பாசுமதி அரிசியுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, தேவையான நீர்விட்டு மலர வேகவைத்துக் கொள்ளவும். அகலமான கடாயில் மீதமுள்ள ஆலிவ் எண்ணெயை ஊற்றி... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தாள், கோஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். தீயைக் குறைத்து, பாசுமதி அரிசி சாதத்தை சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும். தனியே எடுத்து வைத்த வெங்காயத்தாளைத் தூவி பரிமாறவும்.

வெஜிடபிள் கேழ்வரகு மாவு அடை

வெஜிடபிள் கேழ்வரகு மாவு அடை

தேவையானவை:

கேழ்வரகு மாவு (கம்பு மாவு, சோள மாவு, கோதுமை மாவு, சத்துமாவு போன்றவற்றில் தயாரிக்கலாம்) 150 கிராம்.
உளுந்து - 50 கிராம்,
கேரட், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,
முட்டைக்கோஸ் - 25 கிராம்,
இஞ்சி, பூண்டு - சிறிதளவு
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
குடமிளகாய் - ஒன்று
இந்துப்பு (பிளாக் சால்ட் அல்லது நெல்லிப்பொடியும் பயன்படுத்தலாம்) சிறிதளவு

மாவு கலக்கும் முறை:

முறை 1:

காய்கறிகளை சிறிதளவு நீர் விட்டு அரைத்து, அவற்றில் கேழ்வரகு மாவைக் கலக்கவும். பின், சிறிதளவு நீர்விட்டு பிசையவும். பிசைந்த மாவு சிறிது நெகிழ்ச்சியாக, குழைவாக இருக்க வேண்டும். வடைமாவு போல் அளவான நீரில் கலக்கவும்.

முறை 2:

அனைத்து காய்கறிகளையும் தேங்காய்த் துருவல்போல் சிறிதாக நறுக்கவும். கேழ்வரகு மாவை வடை மாவுப் பதத்தில் நீரில் கலக்கி, துருவிய காய்கறிகளைச் சேர்த்து கலக்கவும். இந்த இரண்டு முறைகளில் எந்த முறையில் வேண்டுமானாலும் மாவு தயாரிக்கலாம். இதற்கு, கடல் உப்புக்கு பதிலாக இந்துப்பு சேர்க்கவேண்டும். இதனுடன் சிறிதளவு பாசிப்பருப்பு அல்லது உளுத்தம் பருப்பை அரைத்தும் சேர்க்கலாம். கலக்கிய மாவை, தோசைக்கல்லில் ஊற்றி இருபுறமும் வேக வைத்து பொன்முறுவலாக எடுத்துப் பரிமாறவும். முந்திரி, வேர்க்கடலை சேர்த்தும் செய்யலாம். இதுபோல் முருங்கைக் கீரை+கேழ்வரகு மாவு கலந்து முருங்கைக்கீரை மிக்ஸ் கேழ்வரகு அடை செய்யலாம்.

குறிப்பு: ஏதாவது ஒரு காய்கறி அல்லது ஏதாவது ஒரு கீரை என கலந்தும் அடை வகைகளைச் செய்யலாம். வழக்கமான சைடு-டிஷ் சேர்த்துச் சாப்பிடலாம். தனியாகச் சாப்பிட்டாலும் அருமையான சுவை கிடைக்கும்.

எண்ணெய் இல்லா தண்ணீர் பூரி

எண்ணெய் இல்லா தண்ணீர் பூரி

தேவையானவை:.

கோதுமை மாவு - 150 கிராம்
காய்கறிச்சாறு (வெண்பூணி, கேரட், தக்காளி
ஏதேனும் ஒரு காயில் சாறு தயாரிக்கவும்)
இந்துப்பு - தேவையான அளவு
தேங்காய்த் துருவல்- அரைமூடி,
கரும்பு வெல்லத்தூள் - 100 முதல் 150 கிராம்

மாவு பிசையும் முறை:

சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும்போது கோதுமை மாவுடன் சிறிது சமையல் எண்ணெய் கலந்து, சிறிது பால் கலந்த தண்ணீர் சேர்த்து மாவு பிசைவார்கள். இதற்குப் பதிலாக இங்கு காய்கறிச் சாறு 50 கிராம் எடுத்து அரை மணி நேரம் முன்பாக கோதுமை மாவில் கலந்து, சிறிதளவு நீர்விட்டு (பாலுக்குப் பதிலாக கெட்டித் தேங்காய்ப்பால், முளைதானியப் பால் கலந்தும் தயாரிக்கலாம்) நன்றாகப் பிசையவும். இதனுடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்துப் பிசையவும். பிறகு, இந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி பூரிக்கட்டையில் தேய்க்கலாம். அல்லது பிரஸ்ஸிங் கருவியை பயன்படுத்தியும் தேய்க்கலாம்.

தண்ணீர் இல்லாத பூரி தயாரிப்பு முறை:

5 லிட்டர் கடாய் அல்லது வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் முக்கால் பாகம் (மூன்றரை லிட்டர்) நீர் விட்டு, நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். தேய்த்த மாவை சல்லிக் கரண்டியில் வைத்து, கொதிநீரில் இறக்கி, இரண்டு நிமிடம் வேக வைத்து அப்படியே கரண்டியுடன் வெளியே எடுத்து, தண்ணீர் வடிந்தவுடன் வேறு தட்டில் வைக்க வேண்டும். வழக்கமாகப் பயன்படுத்தும் குருமா, தக்காளி கொஸ்து, விதம்விதமான சட்னி என்று எதையும் இந்த பூரிக்கு சைட் டிஷ்ஷாகப் பயன்படுத்தலாம்.

பயன்கள்:

சொட்டு எண்ணெய் இல்லாத, அரிசி இல்லாத அருமையான உணவுதான் இந்த தண்ணீர் பூரி. தேங்காய்த்துருவலை சமைக்காமல் அப்படியே பயன்படுத்துவதால், கொலஸ்ட்ரால் பயம் தேவையில்லை. பல் இல்லாதவர்களுக்கு மிகவும் பொருத்தமான உணவு. மற்ற பூரியை விட தண்ணீர் பூரி அளவான வெப்பசக்தி (கலோரி) உடையதென்பதால், ஒருவேளையில் 5 முதல் 8 வரை சாப்பிடலாம். தொப்பை, கொலஸ்ட்ரால், கூடுதல் எடை, இதயநோய், அல்சர், நீரழிவு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு இது அருமையான உணவு. தினமும் ஒருவகை மாவில், ஒருவித காய்கறிச்சாறு, ஒருவகை கீரைச்சாறு என மாற்றி மாற்றித் தயாரிக்கலாம்.

குறிப்பு: கோதுமை மாவுக்கு பதிலாக, ராகி மாவு, கம்பு மாவு, சத்து மாவு இவற்றில் ஏதேனும் ஒரு மாவைப் பயன்படுத்தியும் பூரி தயாரிக்கலாம்.

காய்கறிச் சாறுக்குப் பதிலாக கீரைச்சாறு (பசலைக்கீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரை என ஏதேனும் ஒரு கீரை) பயன்படுத்தலாம். அல்லது மூலிகைச் சாறு (கறிவேப்பிலை/ மணத்தக்காளி/ பூண்டு/ வல்லாரை/ வில்வம் என ஏதேனும் ஒரு மூலிகை) பயன்படுத்தலாம். கடல் உப்பு பயன்படுத்தக் கூடாது என்பதால், இங்கே இந்துப்பு பயன்படுத்துகிறோம். இதற்குப் பதிலாக கறுப்பு உப்பு, எலுமிச்சைச்சாறு, நெல்லிப்பொடி ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

கரும்பு வெல்லத்துக்குப் பதிலாக பனைவெல்லம், தேன், பேரீட்சைத் துண்டுகள் என ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். தினமும் ஒருவகை மாவில், ஒருவித காய்கறிச்சாறு, ஒருவகை கீரைச்சாறு என மாற்றி மாற்றித் தயாரிக்கலாம். இந்த பூரிக்கான காய்கறிச்சாறு கேரட் அல்லது தக்காளிச் சாறாக இருந்தால், பூரியானது சிவப்பாக இருக்கும். கீரைச்சாறு, மூலிகைச்சாறு பயன்படுத்தி செய்தால், பச்சையாக இருக்கும். வாரம் ஒருமுறை இருமுறை இந்த உணவை இரவில் செய்து சாப்பிடுவது நல்லது.

பாசிப்பருப்பு புட்டு

பாசிப்பருப்பு புட்டு

தேவையானவை: வறுத்த பாசிப்பருப்பு - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வறுத்த பாசிப்பருப்பை போட்டு தண்ணீர் விட்டு ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் உதிர்த்து வைக்கவும்.

அடி கனமான வாணலியில் வெல்லத்தூளைப் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் நன்றாகக் கரைந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். வெல்லக்கரைசலை வடிகட்டி, மீண்டும் வாணலியில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். ஒரு கம்பி பாகு பதம் வந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள பாசிப்பருப்பு மாவை சேர்த்துக் கிளறவும். மாவு, பாகோடு சேர்ந்து, நன்றாகக் கெட்டியானவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை இதனுடன் கலந்தால்... சத்தான, சுவையான பாசிப்பருப்பு புட்டு ரெடி.

உப்பு அடை

உப்பு அடை

என்னென்ன தேவை?

அரிசி மாவு - 2 கப்

இஞ்சி - சிறு துண்டு

பச்சை மிளகாய் - 3

எண்ணெய் - 4 டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

உளுந்து - 2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

தேங்காய்த் துண்டுகள் - அரை கப்

வேகவைத்த காராமணி - 4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசி மாவை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, உளுந்து போட்டுத் தாளியுங்கள். பிறகு பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டுக் கொதிக்கவிடுங்கள். பிறகு தேங்காய்த் துண்டுகள், காரமணி போட்டு, அரிசி மாவைத் தூவி, கெட்டியாக வரும்வரை கிளறி இறக்கிவையுங்கள். நன்றாக ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவைச் சிறிது எடுத்து வட்டமாகத் தட்டி, நடுவில் ஓட்டை செய்து, ஆவியில் வேகவைத்து எடுங்கள்.

சுரைக்காய் - அவல் தயிர் பச்சடி

சுரைக்காய் - அவல் தயிர் பச்சடி

தேவையானவை:

தோல் நீக்கி, பொடியாக நறுக்கிய சுரைக்காய் - ஒரு கப்
தயிர் - 2 கப்
ஊற வைத்த வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
அவல் - அரை கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அவலைக் கழுவி, சிறிதளவு நீர் சேர்த்து, பத்து நிமிடம் ஊறவிடவும். பிறகு, ஒரு பேஸினில் நறுக்கிய சுரைக்காய், வெங்காயம், வெந்தயம், உப்பு, கொத்தமல்லித்தழை, அவல் ஆகியவற்றைச் சேர்த்து, இத்துடன் தயிரையும் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவும். இதைக் காலை நேர உணவாக சாப்பிடலாம்.

தீர்வு: சுரைக்காய் உடல் எடையைக் குறைக்கும். வெந்தயம் நீரிழிவைக் குறைக்கும். வெங்காயம் குளுமை தரும்.

பலாப்பழ பிரியாணி

பலாப்பழ பிரியாணி

தேவையானவை:

பலாச்சுளைகள் - 250 கிராம்
பலாக்காய் - 150 கிராம்
பட்டை - 1
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
உப்பு - சிறிதளவு
தயிர் - 50 மில்லி
இஞ்சி விழுது - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 3 (நீளமாக நறுக்கி, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்)
கொத்த‌மல்லித்தழை - சிறிதளவு
புதினா இலை - சிறிதளவு
பாஸ்மதி அரிசி - 1 கிலோ

அரைக்க:

கொத்த‌மல்லித்தழை - அரைக் கட்டு
புதினா இலை - 1 கட்டு
பச்சை மிளகாய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - கால் மூடி

தாளிக்க:

நெய் - 100 மில்லி
சீரகம் - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
பிரிஞ்சி இலை - 1

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி உப்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து சூடானதும் பாஸ்மதி அரிசியைச் சேர்த்து, முக்கால் வேக்காடு வெந்ததும், வடித்து ஆற விடவும். அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் மையாக அரைத்து எடுக்கவும். பலாச்சுளைகளைப் பொடியாகவும், பலாக்காயை நீளமாகவும் நறுக்கி வைக்கவும். அடுப்பில் எண்ணெய்ச் சட்டியை வைத்துத் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், பலாக்காயைச் சேர்த்து லேசாக வதக்கவும். இதில் மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விடவும். கலவை நல்ல வாசனை வரும் போது தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரம் கழித்து வ‌டித்த அரிசியை அரை பங்கு கலவையில் சேர்க்கவும். இதன் மேல் வெங்காயம், பலாப்பழம், கொத்த‌மல்லித்தழை, புதினா இலை தூவவும். மஞ்சள்தூளை சிறிது தண்ணீரில் கரைத்து, பிரியாணியின் மேல் தெளித்து விடவும். இதற்கு மேல் மீதம் இருக்கும் மற்ற கலவைகளை மேலே சொல்லியபடி தூவவும். இறுதியாக சிறிது மஞ்சள்தூள் தூவி மூடி போடவும். அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைக்கவும். சிம்மில் அரை மணி நேரம் வைத்து எடுத்தால், அருமையான பலாப்பழ பிரியாணி ரெடி.

உருளைக் கிழங்கு அப்பம்

உருளைக் கிழங்கு அப்பம்

என்னென்ன தேவை?

உருளைக் கிழங்கு - 4

பொட்டுக்கடலை மாவு - 100 கிராம்

பச்சரிசி மாவு - 200 கிராம்

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 3

தேங்காய்த் துருவல் - அரை கப்

மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

எண்ணெய், உப்பு - தேவைக்கு

எப்படிச் செய்வது?

உருளைக் கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து, தோல் உரியுங்கள். இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் இவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாக அரையுங்கள். அரைத்த விழுதுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள், பச்சரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்துக்குக் கரையுங்கள். வேகவைத்த உருளைக் கிழங்கையும் அதனுடன் சேர்த்து நன்றாகக் கரையுங்கள். அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, கரைத்த மாவைக் கரண்டியால் எடுத்து ஊற்றுங்கள். மிதமான தீயில் வேகவைத்து, இருபுறமும் வெந்ததும் எடுத்துவிடுங்கள். இதனுடன் மயோனீஸ் சாஸ் தொட்டுக் கொண்டுச் சாப்பிடலாம்

வடு மாங்காய் மொச்சைப் பிரட்டல்

வடு மாங்காய் மொச்சைப் பிரட்டல்


தேவையானவை:

வடு மாங்காய் - 250 கிராம்

மொச்சை - 250 கிராம்

பூண்டு - 25 கிராம்

சின்ன வெங்காயம் - 75 கிராம்

பொடியாக நறுக்கிய தக்காளி - 40 கிராம்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - ஒன்றரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

புளித்தண்ணீர் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடுகு - அரை டீஸ்பூன்

சோம்பு - கால் டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:

வடு மாங்காயைக் கழுவி ஈரம் போக துடைத்து சின்னதாக வெட்டிக் கொள்ளவும். மொச்சையைத் தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் தண்ணீர் இறுத்து புது தண்ணீர் ஊற்றி வேகவைத்து தனியாக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தக்காளியை சேர்த்து மைய வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் புளிக்கரைசலைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். இதில் வடு மாங்காய், உப்பு, மொச்சையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லிதழை தூவிப் பரிமாறவும்.

கேழ்வரகு அடை

கேழ்வரகு அடை

தேவையானவை:

கேழ்வரகு - 500 கிராம்

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - பொரிக்க‌

சட்னிக்கு:

துருவிய தேங்காய் - 200 கிராம்

பூண்டு பல் - 2

பொரிக்கடலை - 25 கிராம்

காய்ந்த மிளகாய் - 3

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - பொரிக்க‌

செய்முறை:

கேழ்வரகை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வையுங்கள். மறுநாள் தண்ணீரை இறுத்து புதிதாகத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியான மாவாக அரைத்து வைக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி மாவை இருபுறமும் வேகவைத்து எடுக்கவும் சட்னிக்குத் தேவையானதை எல்லாம் மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து, ஒரு பவுலில் வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து சட்னியில் ஊற்றி அடையோடு பரிமாறவும்.

முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல்

முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல்

உங்கள் வீட்டில் கத்திரிக்காய், முருங்கைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு சாம்பார் வைக்காமல், சற்று வித்தியாசமாக பொரியல் செய்து சுவைத்துப் பாருங்கள். அதிலும் இதனை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சுவைத்தால் அற்புதமாக இருக்கும்.
சரி, இப்போது அந்த முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியலை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
முருங்கைக்காய் - 1 (நீள துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய், கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
காய்கள் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, மிளகாய் தூள் தூவி பிரட்டி, பச்சை வாசனை போனதும் இறக்கினால், முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல் ரெடி!!!

சப்பாத்தி லட்டு

சப்பாத்தி லட்டு

நீங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யும் போது, எஞ்சிய சப்பாத்தியை தூக்கி எறியாமல், அதனைக் கொண்டு சில்லி சப்பாத்தி, சப்பாத்தி லட்டு போன்ற வித்தியாசமான ரெசிபிக்களை செய்து சுவைக்கலாம். இங்கு அதில் ஒன்றாக சப்பாத்தி லட்டு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த சப்பாத்தி லட்டுவின் எளிய செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 3
வெல்லம் - 1/4 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பாதாம் - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை:

முதலில் சப்பாத்தியை தோசைக்கல்லில் போன்று மொறுமொறுவென்று டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை சிறு துண்டுகளாக உடைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு அத்துடன் வெல்லம் சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் ஏலக்காய் பொடி, நெய், நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு கையளவு எடுத்து லட்டு போன்று உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படி அனைத்தையும் செய்தால், சப்பாத்தி லட்டு ரெடி!!!

கிராமத்து மிளகு குழம்பு

கிராமத்து மிளகு குழம்பு

கோடையில் அதிகம் வியர்ப்பதால், சிலருக்கு சளி பிடிக்கும். மேலும் வெயில் காலத்தில் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். எனவே இக்காலத்தில் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டும் மிளகை குழம்பு செய்து மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிடுவது சிறந்த வழி.
இங்கு மிளகு குழம்பை எப்படி ஈஸியாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10
புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
மல்லி - 3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து குறைவான தீயில் பொன்னறிமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 20-30 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும்.
அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், மிளகு குழம்பு ரெடி!!!

சத்துக்கள் வீணாகாமல் எப்படிச் சமைப்பது?

சத்துக்கள் வீணாகாமல் எப்படிச் சமைப்பது?
சமையல் என்பது ஒரு கலை. நாம் உணவினை பல வழிகளில் சமைக்கிறோம். கொதிக்கவைத்து, ஆவியில் வேக வைத்து, எண்ணெயில் பொறித்து என இவ்வாறு சமைக்கப்படும் உணவின் நிறத்தை, மணத்தை, ருசியை முக்கியமாக அதில் உள்ள சத்துகளை எப்படி தக்க வைத்து கொள்வது?
• காய்களை கழுவிய பின் நறுக்கவும். நறுக்கிய பின் கழுவினால் அதில் உள்ள சத்துகள்வீணாகும்.
• எண்ணெயில் பொறித்த உணவை விட வேகவைத்த உணவை உண்பது நல்லது. ஏனெனில் அதிக வெப்பத்தில் உள்ள எண்ணெயில் உணவை பொறிக்கும் பொழுது அதிகளவில் சத்துகள் வீணாகிறது.
• அதிகமான தண்ணீரில்,அதிக நேரம் உணவு பதார்தத்தை சமைக்கும் பொழுது அதில் உள்ள சத்துகள் அதிகளவில் வீணாகிறது.ஆதலால் தேவையான அளவு தண்ணீர் வைத்து அது கொதித்தவுடன் உணவுப் பொருளைப் போடவேண்டும்.
• பாத்திரத்தை மூடி சமைப்பதால் சத்துக்கள் வீணாவது குறைக்கப்படுகிறது.
• பச்சையாக உண்ணக் கூடிய காய்கறிகளை நன்றாக கழுவிய பின் சாப்பிடும் பொழுது நமக்கு தேவையான சத்துகள் வீணாகமல் கிடைக்கிறது.
• காய்களை நறுக்கி உடனடியாக சமைக்க வேண்டும். இல்லையேல் நிறம் மாறி வீணாகிவிடும்.
• கீரைகளை 4-5 நிமிடங்கள் வரை மூடாமல் சமைக்க வேண்டும். பிறகு மூடிக் கொள்ளலாம்.
• உருளை, கருனை, போன்ற கிழங்குகளின் தோலைசீவி சமைக்காமல் வேகவைத்து தோலை உரித்தால் உடம்புக்கு மிகவும் நல்லது. தோலிலும் சில சத்துகள் உள்ளது.
• பழங்களை பழச்சாறாக்காமல் அப்படியே சாப்பிடுவது தான் நல்லது.
• முட்டையை கொதிக்கவைத்த தண்ணீரில் 10 நிமிடத்திற்கு மேல் வேகவிடக்கூடாது. வேகவிட்டால் அதில் உள்ள சத்துகள் அழிந்து மஞ்சள் கரு பச்சையாகவோ, சாம்பல் நிறமாகவோ மாறி நம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.
• ஒரு முறை பொறித்த எண்ணெயை திரும்பவும் பயன் படுத்தக்கூடாது.
• உணவை சமைத்தவுடன் சூடாக சாப்பிடுவதே நல்லது. திரும்ப திரும்ப சுடவைத்து சாப்பிடுவது கெடுதல்.
தரமான காய்கறிகளையும், தானியங்களையும் வாங்கினால் மட்டும் போதாது. அதனை முறையாக, சத்துகள் வீணாகாமல் சமைக்கவும் கற்று அனைவரும் பயனடையவேண்டும்.

வெஜிடபில் கிளியர் சூப்

வெஜிடபில் கிளியர் சூப் [Vegetable clear soup] !!!

தேவையான பொருட்கள்:

பெ. வெங்காயம் – 1

தக்காளி -1

காரட் – 1

உருளை – 1

கோஸ் -50 கிராம்

காளிபிளவர் – 4-5 florets

குடை மிளகாய் – 1

எண்ணெய் / வெண்ணெய் -1மேசைக்கரண்டி

தண்ணீர் -400மிலி

பால் -250மிலி

மிளகு தூள் – சிறிதளவு

பட்டை,இலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* காய்கறிகள் அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

*குக்கரில் எண்ணெய்/வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சோம்பு,பட்டை,இலை போட்டு தாளித்து ,காய்களை போட்டு வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும்.

*ஆறியதும் மிக்சியில் போட்டு அரைக்கவும்.பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வடிகட்டவும்.

*வடிகட்டிய சூப்பை சூடு படுத்தி,அத்துடன் பாலை சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூளை சேர்க்கவும்.

*விரும்பினால் சிறிது கொத்தமல்லி இலை மற்றும் புதினாவை பொடியாக நறுக்கி தூவளாம்.

*இப்பொழுது சுவையான ,சத்தான, லோ கலோரி சூப் ரெடி. இளஞ்சூட்டில் பருகினால் சுவையாக இருக்கும்.

மிக்ஸ் வெஜ் சூப்

மிக்ஸ் வெஜ் சூப் !!!

தேவையான பொருட்கள் :

காரெட் - 50 கிராம்

பீன்ஸ் - 50 கிராம்

காலி பிளவர் – 50 கிராம்

முட்டை கோஸ் – 50 கிராம்

காப்சிகம் – 50 கிராம்

மல்லி தழை – தேவையான அளவு

இஞ்சி – சிறிதளவு

பூண்டு -2 பல்

பட்டை -சிறிதளவு

லவங்கம் – 3 எண்ணம்

ஏலக்காய் – 2 எண்ணம்

கார்ன் பளார் (சோள மாவு ) – 2 தேக்கரண்டி

முட்டை – 1 எண்ணம்



செய்முறை :

காரெட் ,பீன்ஸ் ,காலி பிளவர் ,முட்டை கோஸ், காப்சிகம் , மல்லி தழை,இஞ்சி,பூண்டு அனைத்தையும் தனி தனியே பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும் ,

வாணலியை அடுப்பில் வைத்து ,சிறிது எண்ணெய் விட்டு ,

பட்டை,லவங்கம் ,ஏலக்காய் போடவும் . பின் நறுக்கி வைத்த இஞ்சி பூண்டு போடவும். அதன்

பின் காரெட் ,பீன்ஸ் ,காலி பிளவர் போட்டு கிளறிவிட்டு , தேவையான தண்ணீர் ஊற்றவும்.

நன்றாக கொதிக்கும் போது எஞ்சி இருக்கும் முட்டை கோஸ் ,காப்சிகம் போடவும் .தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும் .

அதன் பின் முட்டையை நன்றாக அடித்து கொதிக்கும் கலவையுடன் சேர்க்கவும்.

பின் கார்ன் பளார் (சோள மாவு )தண்ணீரில் கரைத்து ஊற்றவும் . நறுக்கிய மல்லி தழையை போட்டு இறக்கவும்.

பரிமாறும் முன் தேவையான மிளகு பொடி சேர்த்து கொள்ளவும் .

அசைவம் சாப்பிடாதவர்கள் முட்டையை சேர்க்க வேண்டாம்

நெல்லிக்காய் குழம்பு

நெல்லிக்காய் குழம்பு !!!
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் 5, மிளகாய் 4, உளுத்தம் பருப்பு 11/4ஸ்பூன், துவரம் பருப்பு 1/2 ஸ்பூன்,வெந்தயம் 1/2 ஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன், கடுகு, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், பெருங்காயம், கருவேப்பிலை, எண்ணெய் 1டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவியது 1/2 கப், வெல்லம் ஒரு சின்ன துண்டு, அரிசி மாவு 1ஸ்பூன், புளி சிறிதளவு.
செய்முறை:
புளியை கரைத்து உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். நெல்லிக்காயை வேக வைத்து கொட்டையை நீக்கி கொதிக்கும் புளிக்கரைசலில் நெல்லிக்காயை சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிள்காய், தனியா, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, வெந்தயம் ,தேங்காய் துருவல் அனைத்தையும் வறுத்து பொடியக்கி கொதிக்கும் புளிக்கரைசலில் சேர்க்கவும். வெல்லத்தையும் போடவும். நன்றாக கொதித்து வந்ததும் அரிசி மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். ஊற்றி ஒரு கொதி வந்ததும்.வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை போட்டு தாளித்து கொட்டி இறக்கவும். இதோ சுவையான நெல்லிக்காய் கொழம்பு ரெடி.

சமையலறை டிப்ஸ் 2

சமையலறை டிப்ஸ் !!!

1. மைக்ரோவ் ஒவனில் உட்புறப் பகுதியை சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஒவனில் 2 நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க பளிச்சென்று இருக்கும்.
2. பீட்ரூட் நறுக்கும்போது கைகளில் கறை ஒட்டுவதைத் தடுக்க பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேகவைத்துக்கொள்ளுங்கள். பின்பு தோலை எடுத்துவிட்டு துண்டுகளாக்கினால், கறை ஒட்டாமல் இருப்பதோடு, காய் நறுக்குவதற்கும் எளிதாக இருக்கும்.
3. அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் அப்பிக்கொண்டிருந்தால், டைல்ஸை சாதாரண துணியால் துடத்த பின் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்தால் ‘பளிச்’சென்று ஆகிவிடும்.
4. கேரட் அல்வா செய்யும்போது கேரட்டைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த தண்ணீரில் சிறிது நேரம் வைத்து தோலை சீவினால், மிகச் சுலபமாகத் தோலை நீக்கிவிடலாம்.
5. வடைக்கு அரைக்கும்போது மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால்,ஒரு தேக்கரண்டி நெய் விட்டால், மாவு இறுகிவிடும்.
6. பஞ்சு போன்ற இட்லிக்கு, கிரைண்டரில் உளுத்தம்பருப்பு பதி மசிந்ததும் ஏழெட்டு ஐஸ் கட்டிகளைப் போட்டு அரையுங்கள். மாவும் அதிகம் வரும். இட்லியும் பூப்போல மெத்தென்று இருக்கும்.

7 சாம்பாரை இறக்கும்போது, அதில் வறுத்துப் பொடித்த தனியாப் பொடியைத் தூவி இறக்கினால், கும்மென்று வாசனை தூக்கும்.

8 மோர்க் குழம்பு செய்யும்போது, சிறிதளவு ஓமத்தை அரைத்துவிட்டால், குழம்பு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

9 நெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்சினால், நெய் வாசனையாக இருப்பதோடு, நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.

10 வடை, பக்கோடா செய்யும்போது, ஒரு தேக்கரண்டி ரவை கலந்து செய்தால், பக்கோடா மொறுமொறுப்பாக இருக்கும்.

11.இட்லிப்பொடி அரைக்கும்போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால்,சுவை கூடுதலாகும்.

12.ரவா தோசை செய்யும்போது 2 தேக்கரண்டி சோளமாவு சேர்த்து செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்று இருப்பதோடு, உடம்பிற்கு நல்லது.

13.எதிர்பாராமல் விருந்தாளி வந்துவிட்டால், பஜ்ஜி போட காய்கறி இல்லையே என்று கவலைப்படவேண்டாம். பஜ்ஜிக்கான மாவைத் தயாரித்து,அதில் தோலுடனான வறுத்த வேர்க்கடலையை தோய்த்து பஜ்ஜி போடலாம். இது சுலமான பஜ்ஜி. சுவையாகவும் இருக்கும்.

14.இரவில் பால் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாலில் 6 பூண்டுப் பற்களை போட்டுக்காய்ச்சி சாப்பிட்டால், கொலாஸ்ட்ரல் பிரச்சினையே வராது.

பூண்டு- கறிவேப்பிலை வெங்காய குழம்பு

பூண்டு- கறிவேப்பிலை வெங்காய குழம்பு:!!!

தேவையான பொருட்கள்:

பூண்டு-5 பல்; கறிவேப்பிலை-1 கப்; வெந்தயம்-1 தேக்கரண்டி; கடுகு-1/2 தேக்கரண்டி; காய்ந்த மிள்காய்-4; சின்ன வெங்காயம்-1 கப்; தக்காளி-1; தனியா பொடி-1 மேஜைக் கரண்டி; எண்ணெய்-1 மேஜைக் கரண்டி; புளி-எலுமிச்சை அளவு; உப்பு-தேவையான அளவு;

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை வறுத்து, அரைக்கவும். மீதமுள்ள எண்ணையை வாணலியில் விட்டு, கடுகு மற்றும் வெந்தயம் தாளித்து, பூண்டு, நறுக்கிய தக்காளி, வெங்காயம் போட்டு சுருள வதக்கவும். பின் புளியைக் கரைத்து விட்டு, அரைத்த கறிவேப்பிலை விழுது, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இறக்கும்போது, தனியாத் தூளை சேர்க்கவும்.

இது பிரசவம் ஆன பெண்களுக்கு மிகவும் ஏற்றது.

சமையல் டிப்ஸ்1

சமையல் டிப்ஸ்1
!!!
*. கொத்தமல்லித் தழையுடன் உப்பு பச்சை மிளகாய் சேர்த்து, அரைத்து, அதை வடைகளாகத் தட்டி, வெயிலில் காயவைத்துக் கொண்டால், அதை, குழம்பு ரசம் வைக்கும்போது சேர்க்கலாம். கூடுதல் மணமும் சுவையும் கிடைக்கும்.
* தக்காளி நன்றாகப் பழுத்துவிட்டால், உப்புத்தூளில் பிசிறி வைத்துவிட்டால், 2 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
* சப்பாத்தி பூரிக்கு மாவு பிசையும்போது அத்துடன் கொஞ்சம் கடலைமாவையும் கலந்து பிசைந்தால், பூரி சப்பாத்தி கூடுதல் சுவையுடனும் மொறமொறப்பாகவும் இருக்கும்.
* வத்தக் குழம்பு செய்யும்போது சிறிது கார்ன் ஃப்ளவர் மாவைக் கரைத்து ஊற்றவும். சுவையும் சத்தும் கூடும்.
* வாழைப்பூ அடைக்கு பூவை அப்படியே நறுக்கிப் போடக்கூடாது. வாழைப்பூவை முக்கால் பதத்துக்கு வேக வைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மாவில் கலந்து அடை செய்யவும். சுவையாக இருக்கும்.
* நுங்கை வாங்கி வந்ததும் சிறிது னேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். பிறகு எடுத்து தோலை உரித்தால், எளிதாக வரும். ஜில்லென்று இருக்கும்.
* கூட்டு செய்யும்போது, உளுத்டஹ்ம் பருப்பு டஹ்னியா இவைகளை அரைத்து விட நேரம் இல்லையென்றால், பரவாயில்லை. கொஞ்சம் ரசப்பொடியைசேர்த்தால், அரைத்துவிட்ட அதே டேஸ்ட் கிடைக்கும்.
* முட்டைக் கோஸை பொடியாக நறுக்கி, வதக்கி மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தால், சுவையான ‘ கோஸ் துவையல்’ தயார்.
* எலுமிச்சை ஊறுகாய் போடுவதற்கு முன், நன்றாகக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டுக் கலக்கவும். பிறகு முழு பழங்களைப் போட்டு மூடி வைத்து விடவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து, நறுக்கி ஊறுகாய் போட்டால், மறுநாளே உபயோகிக்கலாம். கசப்பு அடியோடு இருக்காது.
* கிரைண்டர் குழவியை செங்குத்தாக வைத்துத்தான் கழுவ வேண்டும். படுக்கை வாக்கில் கழுவினால், பேரிங் பழுதாகிவிடும்.
* இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக மொச்சை பயன்படுத்தலாம். அதிக ஊட்டச் சத்து கிடைக்கும். உளுந்துக்கும் இதற்கும் மணம், சுவையில் வேறுபாடு தெரியாது. செலவும் குறைவு.
* இட்லிக்கு மாவு அரைக்கும்போது, உளுந்தை சற்றுக் குறைத்துவிட்டு, இளம் வெண்டைக்காயை நறுக்கிப் போட்டு ஊற வைத்து அரைக்கவும். இட்லி மிருதுவாக வரும்.
* எள்ளூக் கொழுக்கட்டைக்கு எள்ளை வறுக்கும்போது அத்துடன் கொஞ்சம் கசகசாவையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்தால், சுவையும் வாசனையும் அள்ளும்.
* அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும். தேகுழல், ஓமப்பொடி செய்யும்போது உருளைக் கிழங்கை வேஅக் வைத்து ,மாவுடன் கலந்து பிசைந்தால், சுவை கூடும்.
* அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை, முறுக்கு செய்யலாம்.
* பனீர் பொறிக்கும்போது, எண்ணெயில் சிறிதளவு உப்பு போட்டு, பொறித்தால், சீராகப் பொறியும். சாதாரணமாகப் பொறிக்கும்போது சில இடங்களில் கருகுவது போல கருகவும் செய்யாது.
* காலிஃப்ளவரை ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது, ப்ளாஸ்டிக் கவரில் போட்டு வைக்கக் கூடாது. அடியில் உள்ள கிடிஸ்டரில் வைக்கலாம். அதிலும் தண்டுப் பகுதி மேற்புறமாக இருக்கும்படி வைத்தால் ஈரம் பூவின் மேல் தாக்காது.
* ஜாங்கிரிக்கு நீரில் ஊற வைத்த உளுத்தம்பருப்பை விழுதாக அரைத்தவுடன் ஒரு கப் உளுந்து விழுதுக்கு ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கலந்து பிழிந்தால், உடையாமல் முழுதாக வரும்.
* வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தைக் கரையவிட்டு, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தால், அப்பம் புஸ்ஸென உப்பி வரும்.
* சூடான இட்லியைத் தேனில் தொட்டு சாப்பிட்டால், மூல நோயின் தாக்கம் குறையும்.
* சூடாக இருக்கும் கறந்த பாலில் தேன் கலந்து அருந்தினால், மூளை வலிமை பெறும்.
* இனிப்பான மம்பழச் சாற்றில் தேன் கலந்து அருந்தினால், நரம்புத் தளர்ச்சி நோய் மறையும்.
* கொஞ்சம் பெருங்காயத் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகினால், வயிற்றுப் பொருமல் நிற்கும்.
* ஜீரகத்தை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கசக்கி இரண்டு பங்கு தண்ணீரில் கொதிக்க வைத்து, ஒரு பங்காக தண்ணீர் சுண்டியதும் எடுத்து வடிகட்டி வெதுவெதுப்பான பதத்தில் அருந்தினால், அஜீர்ணத்தால் வரும் வயிற்றுவலி அகலும்.

போண்டா மோர்க்குழம்பு-

போண்டா மோர்க்குழம்பு- செய்வது எப்படி?:

போண்டாவுக்காக:
உளுத்தம் பருப்பு-1/4 கப்; பச்சரிசி-1/2 டீ ஸ்பூன்; பச்சை மிளகாய்-2; உப்பு-தேவைக்கேற்ப; இஞ்சி-1/2 இஞ்ச் துண்டு; கறிவேப்பிலை-சிறிதளவு.
மோர்க்குழம்புக்காக:
கெட்டித் தயிர்-1 கப்; மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்; உப்பு-தேவைக்கேற்ப;
அரைக்க:
தனியா-1 டேபிள் ஸ்பூன்; கொண்டக் கடலை-2 டீ ஸ்பூன்; இஞ்சி-1 இஞ்ச் துண்டு; பச்சை மிளகாய்-4; துருவிய தேங்காய்-1/2 கப்;.
தாளிக்க:
தேங்காயெண்ணெய்-1 டீ ஸ்பூன்; கடுகு-1 டீ ஸ்பூன்; கறிவேப்பிலை- சிறிதளவு; சிவப்பு மிளகாய்-2.
செய்யும் முறை:
உளுத்தம் பருப்பை அரிசியுடன் சேர்த்து, 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்துவிட்டு, உளுத்தம் பருப்பு, அரிசி,பச்சை மிளகாய், உப்பு, மிளகு மற்றும் இஞ்சி சேர்த்து நைஸாக அரைக்கவும். அரைத்த மாவுடன் கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் சிறிது மாவை எடுத்து போண்டாவாக எண்ணெயில் போட்டு நன்கு சிவந்ததும் எடுக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை வைத்து, அதில் பொறித்த போண்டாவைப் போடவும். இதே போல் மீதமுள்ள மாவையும் போண்டாவாக செய்து தண்ணீரில் போடவும்.
தனியாவையும், கொண்டக்கடலையையும் தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து பின்பு தண்ணீரை வடிகட்டியபின்,அத்துடன், பச்சை மிளகாய், இஞ்சி, துருவிய தேங்காய் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு வாணலியில் தயிர், மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கி வைத்து, மோர்க்குழம்பு, கொதிக்க ஆரம்பித்ததுமே ஸ்டவ்வை நிறுத்தி வைத்து அத்துடன் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிக்கவும். பின்னர், அத்துடன் காய்ந்த மிள்காய், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இந்த தாளித்த பொருட்களை மோர்க்குழம்பில் சேர்க்கவும். பின்பு ஊற வைத்த போண்டாக்களை மோர்க்குழம்பில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சூடான சாதத்துடன் சாப்பிடவும்.

சமையல் டிப்ஸ் டிப்ஸ்

சமையல் டிப்ஸ் டிப்ஸ்:!!!

1. பருப்பு அவிக்கும்போது, சிறிது நல்லெண்ணெய் விட்டால், எளிதாக வெந்துவிடும்.
2. நெல்லிக்காய் ஊறுகாயில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்தால், எளிதில் கெடாது..
3. இட்லிக்கு உளுந்து அரைக்கும்போது ஐஸ்வாட்டர் விடவும். மாவு சூடாகாமல் .. இட்லி பூப்போன்று வரும்.
4. சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, லேசாக சூடான பாலை சேர்த்துக்கொண்டு பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
5.. குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால், உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
6.சர்க்கரைப் பாகில் எலுமிச்சைசாறு சேர்த்தால், சீக்கிரம் கெட்டியாகாது. பூத்துப்போகாது
.7.. ரோஜாப்பூவை விரும்பாத பெண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இந்தப் பூவை முகர்ந்து பார்த்தாலே தலைவலி, தலை பாரம் போன்ற சின்னச் சின்ன பிரச்சினைகள் நீங்கும். இதழ்களை மென்று தின்றால், வாய்ப்புண், துர்வாடை அகலும். ரோஜாப்பூவை சாறாக அல்லது கசாயமாக குடித்துவந்தால், பெண்களின் கருப்பை வலுவடையும்.அத்துடன் மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் வலி, அதீத ரத்தப்போக்கு நீங்கும்.

* கிச்சனில் பாட்டில் துர்நாற்றம் வீசுகிறதா? அதில் சிறிது கடுகு போட்டு, வெந்நீர் ஊற்றவும். சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும்.
* பயறு வகைகளை ஊறப்போட மறந்துவிட்டீர்களா? கவலையே வேண்டாம். பயறை ஹாட் பேக்கில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மூடவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து , வழக்கம்போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்திக்கொள்ளவும்.
* கேக் செய்யும்போது முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பாலில் ஊறப்போட்டு பிறகு சேர்த்தால், கேக்கிலிருந்து உதிர்ந்து விழாமல் இருக்கும்.
* வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், பூப்பூவாக வரும்.
* புதிதாக அரைத்த மிள்காய்த் தூளில், சிறிது சமையல் எண்ணெய் விட்டு கிளறி வைத்தால், கார நெடி இல்லாமல் சுவை கூடும்.
* வெண்டைக்காய்ப் பொரியல் செய்யும்போது சிறிது சீரகத்துடன் தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து , பொடியாக்கிப் போட்டால், பொரியல் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
* பேக்கிங் அவனில் கேக் கலவைகளை வைத்த பிறகு ‘ கேக் வெந்திருக்கிறதா’ என்று தெரிந்துகொள்ள அவசரப்பட்டு, குறிப்பிட்ட நேரத்துக்குமுன், வெளியே எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால், கேக்கின் வடிவமும் சுவையும் மாறிவிடும்.
* மணத் தக்காளி வற்றல் குழம்பு செய்யப் போகிறீர்களா? தாளிக்கும்போது இரண்டு உளுந்து அப்பளங்களையும் தாளிக்கும் எண்ணெயில் போட்டு , அப்பளம் நன்றாகப் பொறியும்வரை வறுத்து, பிற்கு புளியைக் கரைத்து ஊற்றி வற்றல் குழம்பு செய்யவும். புதுச் சுவையோடு குழம்பு மணக்கும்.
* உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, முதலில் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தடவிக்கொண்டு பிறகு உளுந்தைப் போட்டு அரைக்கவும். ஒட்டாமல் வரும்.
* மீந்துபோன சாதத்தில் தண்ணீர் ஊற்றினால், ஊறி மாவு போல கூழாகிவிடும். தண்ணீருடன் இரண்டு டீ ஸ்பூன் மோர் கலந்துவிட்டால், மறுநாளும் சாதம் மல்லிகைப்பூப் போல உதிர் உதிராக வரும்.
* நமத்துப்போன பிஸ்கட்டுகளை அப்படியே ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு, ஒரு மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைத்துப் பாருங்களேன். பிஸ்கட் கரகர, மொறுமொறுவென இருக்கும்.
* காபித்தூள் பாக்கெட்டை பிரிக்காமல் அப்படியே ஃப்ரிஜ்ஜில் வைத்து விடவும். எப்போது எடுத்தாலும், அதே மணம்! அதே குணம்!
* முருங்கை இலையைக் கிள்ளுவது கஷ்டம்தான். ஒரு ஈரத்துணிக்குள் முருங்கை கொத்தை இறுக்கமாகக் கட்டி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் பிரித்தால், இலைகள் நன்றாக உதிர்ந்திருக்கும்.
* சுரைக்காய், பரங்கிக்காய், பூசணிக்காயைக் குழந்தைகள் சாப்பிடுவதில்லையா? அவற்றை அப்படியே மிக்ஸியில் அரைத்து அடை மாவில் கலந்து அடையாக வார்த்துக் கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.
* அப்பம் செய்யும்போது வட்டமாக வராவிட்டாலோ, கடினமாக இருந்தாலோ, மாவின் அளவுக்கேற்ப சூடான பால் விட்டுக் கலந்துகொள்ளவும். அப்பம் மெத்தென வட்டமாக வரும்.
* பிரியாணி செய்யும்போது , குக்கர் மூடியைத் திறந்ததுமே, எலுமிச்சைச் சாறை சிறிதளவு விட்டுக் கிளறி விடவும். பிரியாணி பொலபொலவென இருக்கும்.
* வெண்டைக்காய்ப் பொரியலுக்கு நறுக்கும்போது, அப்படியே வைத்து வட்டவட்டமாக நறுக்கக்கூடாது, நீளவாக்கில், பிளந்துவிட்டு பிறகு நறுக்கினால், உள்ளே புழு, பூச்சி இருந்தால், தூக்கி எறிந்து விடலாம்.

* பொடி வகைகளில் உப்பு அதிகமகிவிட்டால், குறிப்பிட்ட பொடி வகையில் உள்ள பருப்பு எதுவோ அதை தேவைக்கேற்ப கொஞ்சம் எடுத்துக்கொள்ளவும். அதை கடாயில் வறுத்து, பொடியாக்கி, பொடி வகையுடன் கலந்தால் சரியாகிவிடும்.
*தக்காளி சூப் செய்யும்போது, ஒரு சிறிய துண்டு பீட்ரூட்டை வேகவைத்து சேர்த்தால், சூப் நல்ல சிகப்பு நிறத்தில் இருக்கும்.
* ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, அதை மசால்வடை மாவில் கலந்து வடை சுட்டால், சுப்பர் சுவை. சுடச்சுட சாப்பிட்டுவிடவேண்டும்.ஆறவிட்டால், ஜவ்வரிசிவடை ஜவ்வு வடையாகிவிடும்.
* சூப் நீர்த்துப் போய்விட்டால், வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சூப்பில் கலக்கவும். சூப் கெட்டியாகிவிடும். சுவையும் கூடும்.
* மசால்வடை மாவு நீர்த்துப்போய்விட்டதா?இரண்டு ரொட்டித் துண்டுகளை மிக்ஸியில் பொடியாக அரைத்து, வடை மாவுடன் சேர்க்கவும். பிறகு வடை தட்டினால், பிரமாதமாக வரும்.
* பூசணிக்காய் அல்வா செய்வதற்குமுன், காயின் மேல்தோலை சீவி, ஃரிஜ்ஜில் அரைமணிநேரம் வைக்கவும். பிறகு அதைத் துருவினால், ஒரே சீராக வரும். அல்வாவும் சுவையாக , கெட்டியாக இருக்கும்.
* திரட்டுப்பால் செய்யும்போது, சிறிய மெல்லிய எவர்சிவர் தட்டை அதனுள் போட்டுவிட்டால், பால் பொங்காமலும், அடிப் பிடிக்காமலும் கிளறவரும்.
* கேஸ் சிலிண்டரை ஒரு தெர்மாகோல் ஷீட்டின் மீது வைத்துவிட்டால், தரையில் கீரல், கரை ஏற்படாது. நகர்த்துவதும் எளிது.
* கூட்டு , பருப்பு, சாம்பார், லேசாக அடிப் பிடித்துவிட்டதா? அதைவேறு பாத்திரத்துக்கு மாற்றி, அரைமூடி எலுமிச்சை சாறு ஊற்றிக் கிளறவும். தீய்ந்த வாசனை வராது.
* பாகற்காய், வாழைத் தண்டு, வாழைப்பூ இவற்றை முதலில் களைந்த அரிசித் த்ண்ணீரில் 15 நிமிடம் போட்டு வைக்கவும்.பிறகு வேறு தண்ணீரில் அலசிவிட்டு சமைத்தால், கசப்பு குறையும். நிறம் மாறாது.
* கடலை மாவு, அரிசி மாவு கலந்து பஜ்ஜி செய்வதற்கு பதிலாக, கடலைப் பருப்பையும் பச்சரியையும் ஊறவைத்து, பெருங்காயம், மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைத்துச் செய்தால், தனி ருசி.
* கைகளில் 3 சொட்டு எண்ணெய் தடவிக்கொண்டு, ப்லாக் கொட்டைகளை நன்றாகக் கைகளில் வைத்து தேய்த்து, வைத்துவிடவும். மறுநாள் பலாக் கொட்டைகளின் தோலைஉரிப்பது எளிதாக இருக்கும்.
* மரவள்ளிக் கிழங்கில் வறுவல் செய்யும்போது, பச்சையாக சீவி வறுக்காமல், 5 நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுத்தபின் வறுத்தால், மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.
* ஜவவ்ரிசி பாயசம் செய்வதற்கு முன் ஜவ்வரியை லேசாக வறுக்கவும். அதில் வெந்நீரை ஊற்றி அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு பாயசம் செய்தால், விரைவில் வெந்துவிடும். கேஸ் செலவும் மிச்சமாகும்.

இஞ்சி சொரசம்

இஞ்சி சொரசம்- செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்;

இஞ்சி-20 கிராம் (2 இஞ்ச் சைஸில்); கொத்தமல்லி விதை-2 டீ ஸ்பூன்; உலர்ந்த திராட்சை-1 டீ ஸ்பூன்; ஜீரகம்- ½ டீ ஸ்பூன்; ஏலக்காய்-5; தேன்-2 டீ ஸ்பூன்; எலுமிச்சம் பழம் ( மீடியம் சைஸ்) -1.

செய்முறை:

எல்லாப் பொருட்களையும் நைஸாக அரைத்து அத்துடன் 1 டம்ளர் (200 மி.லி) தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையைக் கொதிக்க விடவும். தீயைக் குறைத்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கட்டும். பின்பு, ஆற விட்டு, வடிகட்டி, தேன், எலுமிச்சைச் சாறு கலந்து, 50 மி.லி. தண்ணீர் சேர்த்து கலக்கவும். இது அஜீர்ணத்துக்கும், பசியின்மைக்கும் மிகவும் நல்ல கை மருந்தாகும். இது இரண்டு வேளைக்குப் போதுமானதாகும்.

பசலைக் கீரை சூப்

பசலைக் கீரை சூப்- செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பசலைக் கீரை-1 தம்ளர்; வெங்காயம்-தக்காளி- தலா 1; சோள மாவு-1 தேக்கரண்டி; மிளகுத்தூள், வெண்ணெய், ‘பிரெஷ் க்ரீம்’; உப்பு.
செய்முறை:
பசலைக் கீரையை தண்ணீரில் அலசி, பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியையும், சிறுசிறு துண்டுகளாக்கவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் போட்டு உருக்கி, வெங்காயம் தக்காளி, கீரை, உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்.பிறகு இறக்கி ஆறியபின் மிக்ஸியில் விழுதாக அரைத்து, சோளமாவு சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கவும். மிளகுத்தூள், ஃபிரெஷ் க்ரீம் சேர்த்துப் பருகலாம். குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.
மருத்துவப் பலன்:
பசலைக்கீரை இரும்புச் சத்தைக் கொடுக்கும்.
பளபளக்கும் மேனிக்கு பசலை என்கிறது, நமது இயற்கை வைத்தியம். ஆகவே மேனி பளபளப்பு பெறும்.
உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.
சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள கீரை பசலையே!

கறிவேப்பிலை-பால் சூப்

கறிவேப்பிலை-பால் சூப்- செய்வது எப்படி?

கறிவேப்பிலை-பால் சூப்:

தேவையான பொருட்கள்;

கறிவேப்பிலை-1 தம்ளர்; பால்-அரை தம்ளர் ; பாசிப் பருப்பு-10 தேக்கரண்டி; லவங்கம்-2; வெங்காயம்-1 தக்காளி-1வெண்ணெய்-1 தேக்கரண்டி; மிளகுத் தூள், உப்பு.

செய்முறை:

வாணலியில் வெண்ணெயை உருக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, சுத்தம் செய்த கறிவேப்பிலை மற்றும் பாசிப் பருப்பு, லவங்கம் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும். இதை இறக்கி மிக்சியில் அரைத்து பால். மிளகுத் தூள், உப்பு சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கி சூடாகப் பருகலாம்.

மருத்துவப் பலன்கள்:

பித்தக் கோளாறுகளை நீக்கும்.
கண் ஒளியைத் தரும்.
தலைமுடி கருமையாக இருக்க உதவும்.
காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளைத் தணிக்கிறது.

பூண்டு சூப்

பூண்டு சூப்- செய்வது எப்படி?:

தேவை:

புளித் தண்ணீர்-1 தம்ளர்; பூண்டு-10 பல்; மிளகு, ஜீரகம் –தலா 2 தேக்கரண்டி; மல்லித்தழை, கருவேப்பிலை.

செய்முறை:

புளித் தண்ணீரைக் கொதிக்க விடவும். மிளகு, ஜீரகம், பூண்டு,கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து, அதில் கலக்கவும். வெண்ணெய், உப்பு சேர்த்து நன்கு கொதி வந்ததும், இறக்கி, சுத்தம் செய்த மல்லித்தழை சேர்த்து பருகலாம்.

மருத்துவ பலன்கள்:

பசியைத் தூண்டும்.
நல்ல கிருமிநாசினி.
ஆஸ்துமா, மூக்கடைப்புக்கு அருமருந்து.
கொழுப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்துக்கு நல்ல நிவாரணி.

சமையலறை டிப்ஸ்

சமையலறை டிப்ஸ்:!!!

* போளிக்கு பூரணம் செய்யும்போது, அது நீர்த்துவிட்டால், அடுப்பில் வைத்து, சிறிது நெய் ஊற்றிக் கிளறவும். கெட்டியாகிவிடும்.
* ரசத்துக்கான பொருட்களை பொடி பண்ணும்போதே, சிறிது கடுகு சேர்த்துக்கொண்டால், தெளிந்த ரசம் கிடைக்கும். மிக்ஸியில் வெந்தயம், ஏஅல்க்காய் போன்றவற்றை அரைத்தால், அவற்றின் வாசனை எளிதில் போகாது. அதன் பிறகு, மிக்ஸியில் ஒரு கைப்பிடி வேர்க்கடலை போட்டு அரைத்து எடுத்தால், வாசனை முற்றிலும் நீங்கிவிடும்.
* எள் உருண்டை செய்வதற்கு, எள்ளை தண்ணீரில் அலசினால், கையில் ஒட்டிக்கொண்டுவிடும். பெரிய ஓட்டை உள்ள சல்லடை அல்லது வடிகட்டியில் எள்ளைப் போட்டு தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுத்தால், எளிதாக அலசிவிடலாம்.
*. உருளைக் கிழங்கு வறுவல் செய்யும்போது, கிழங்கின்மீது சிறிது பயத்த மாவைத் தூவி, பின் பொறித்தெடுக்கவும். வறுவல் மொறுமொறுப்பாக இருக்கும்.
* சர்க்கரையை அப்படியே காபி, டீ, ஜூஸ் போன்றவற்றில் இடும்போது, கரைவதற்கு அதிக நேரம் பிடிக்கும். சில நேரங்களில் கரையாமல் இருந்து வீணாவதும் உண்டு. இதற்குப் பதிலாக சர்க்கரைப்பொடி செய்து வைத்துக்கொண்டு பயன்படுத்தினால், நேரமும் மிச்சம். சர்க்கரையும் வீணாகாது.
* அவல் பொரியை அப்படியே பாகில் போடுவதற்குப் பதில், பொரியை வெறும் கடாயில் வறுத்து, பிறகு பாகில் போட்டு பொரி உருண்டை பிடிக்கலாம். பொரி உருண்டை மொறுமொறுப்பாக இருக்கும்.
* மிளகாய்- பஜ்ஜி செய்யும்போது, மிளகாயை நீளவாக்கில் கீறவும். அதனுள் சிறிது உப்பு, இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விடவும். பிறகு எண்ணெயில் போட்டு பஜ்ஜி செய்யவும். டேஸ்டாக இருப்பதோடு, காரமும் இருக்காது.
* பருப்பு வடைக்கு அரைக்கும்போது, ஊற வைத்த பருப்பு மற்றும் பொருட்களுடன் ஒரு டேபிள் ஸ்பூன் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கவும். மாவில் சிறிது நெய் சேர்த்து வடை தட்டவும். வடை கரகரப்பாக நல்ல சுவையுடன் இருக்கும்.
* சமோசாவை பொறிப்பதற்கு முன்பு, ஒரு சிட்டிகை சோடா உப்பைஎண்ணெய் காய்ந்ததும் போட்டு, பொரிய விடவும். பிறகு சமோசாவைப் பொறித்தெடுக்கவும். மொறுமொறுப்பு மாறாமல் இருக்கும்.
* காப்பர் பாட்டம் உள்ள பாத்திரத்தில் ஐஸ்கிரீம் கலவையை ஊற்றி வைத்தால், ஐஸ்கிரீம் சீக்கிரம் கெட்டியாகிவிடும்.
* தயிர் வடை அல்லது சாம்பார் வடை செய்ய உளுந்து ஊறப் போடும்போது, உளுந்தின் கால் பங்கு அளவுக்கு மசூர்தால் சேர்த்துப் போடுங்கள். வடை மிகவும் மெதுவாக இருக்கும்.
* பாகற்காய் பொரியல் செய்யும்போது சிறிது கேரட், வெங்காயம் துருவிப் போட்டு நிறைய கறிவேப்பிலை சேர்த்தால், கசப்பே தெரியாது.
* கேரட்டில் சூப் செய்யும்போது, அதில் சிறிது சேமியாவை வறுத்துப் போடவும். சூப் திக்காக இருக்கும். பார்க்கவும் அழகாக இருக்கும்

தயிர் வடை

தயிர் வடை!

தேவையானப்பொருட்கள்:

உளுத்தம் பருப்பு – 1 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு சிறு துண்டு
தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன் அல்லது ருசிக்கேற்றவாறு
எண்ணை – பொரிப்பதற்கு

தயிர் – 2 கப்

அலங்கரிக்க:

பச்சை கொத்துமல்லி தழை – சிறிது
காரட் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
காராபூந்தி – 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் 2 அல்லது 3 மணி நேரம் ஊற வைத்து நன்றாக மை போல் அரைக்கவும். வழித்தெடுக்குமுன் உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை தனியாக அரைத்துக் கொள்ளவும். தயிரை நன்றாகக் கடைந்து, அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, இலேசாக விரல்களால் அழுத்தி நடுவில் துளையிட்டு எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பொரித்தெடுத்த வடையை குளிர்ந்த நீரில் போட்டு ஓரிரு நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து இலேசாக கைகளால் அழுத்தி அதிலுள்ள நீரை அகற்றி விட்டு தயிரில் போட்டு 20 முதல் 30 நிமிடங்கள் ஊற விடவும்.

பரிமாறும் முன் அதன் மேல் காராபூந்தி, காரட், கொத்துமல்லித் தழைத் தூவி பரிமாறவும்.

பாகற்காய் ஊறுகாய்

பாகற்காய் ஊறுகாய் :!!!

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 2.
எலுமிச்சம்பழம் – 4.
உப்பு -ஒரு டீஸ்பூன்.
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்.
பச்சை மிளகாய் -10.

செய்முறை:

பாகற்காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறிக்கொள்ளவும். வாணலியில் ஒரு கப் தண்ணீர் வைத்து, அது கொதிக்கும்போது பாகற்காய் துண்டுகளை அதில் போடவும். பாதி வெந்துகொண்டிருக்கும்போது, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பச்சை மிளகாயையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும், இறக்கி ஆறவிடவும். எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து, அந்தச் சாற்றை பாகற்காயில் சேர்த்துக் கிளறவும். பாகற்காய் அந்தச் சாற்றில் ஊறியதும், சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அருமையான இன்ஸ்டன்ட் ஊறுகாய் கிடைக்கும்.

பயன்:

வயிற்றில் பூச்சிகள் இருந்தால், முகம், கை, முதுகு போன்ற இடங்களில் தேமல் வரும். கண்ணிமையில் உள்ள முடி, சரியாக வளராமல் ஒட்டிக்கொள்ளும். இந்த ஊறுகாய் சாப்பிட்டால், பூச்சிகள் அழியும்.
தேமல் மறைவதோடு, இமை முடி நன்கு வளரும்.

மூலிகை சட்னி

மூலிகை சட்னி !

தேவையானவை:

வல்லாரைக் கீரை – (ஆய்ந்தது), புதினா இலை – தலா ஒரு கப், கொத்தமல்லி இலை – அரை கப், கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் – 10, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லி, புதினா, கறிவேப் பிலை, வல்லாரைக் கீரை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, ஆறிய வுடன் உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக் கவும்.

சப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த சட்னி.

வேர்க்கடலை சுக்கு பொடி

வேர்க்கடலை சுக்கு பொடி!!!

தேவையானவை:
வேர்க்கடலை – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 6, பொடித்த சுக்கு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, ஓமம் – கால் டீஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், ஓமம், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்துப் பொடித்து, அதனுடன் சுக்குத்தூள் கலந்து வைக்கவும். இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். பொரியல் வகைகளுக்கும் மேல் பொடியாக உபயோகிக்கலாம்.