சென்னை ஸ்பெஷல் : சைவ பிரியாணி

சென்னை ஸ்பெஷல் : சைவ பிரியாணி செய்வது எப்படி ...!!


என்னென்ன தேவை?

கேரட், பீன்ஸ்,

பச்சை பட்டாணி,

உருளைக் கிழங்கு – தலா 100 கிராம்

பச்சை மிளகாய் – 4

தயிர் – 3 டீஸ்பூன்

காஷ்மீர் மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்

பட்டை – 2

லவங்கம் – 4

ஏலக்காய் – 2

ஜாதிக்காய்த் தூள் – சிறிதளவு

வெங்காயம், தக்காளி – தலா 2

இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன்

பாசுமதி அரிசி – 2 கப்

புதினா, கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசுமதி அரிசியை பத்து நிமிடம் ஊறவையுங்கள். குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், ஜாதிக்காய் போட்டுப் பொரிந்ததும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்குங்கள்.

அதில் இஞ்சி – பூண்டு போட்டு வதக்கி பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்குங்கள். பிறகு கொத்தமல்லி, புதினாவைச் சேர்த்து காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்குங்கள்.

மிளகாய்த் தூள், தயிர் சேர்த்து நன்றாக வதக்கி, ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்துச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள்

நான்கு கப் தண்ணீரை வேறொரு பாத்திரத்தில் கொதிக்கவைத்து அதை அரிசி கலவையில் ஊற்றிக் கிளறி குக்கரை மூடிவிடுங்கள். சிறு தணலில் பத்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான பிரியாணி தயார்.

வெந்தயக்கீரை சாம்பார்

உடல் குளிர்ச்சி தரும் வெந்தயக்கீரை சாம்பார் செய்வது எப்படி ...!!

உடல் குளிர்ச்சி மற்றும் குடல் புண்களை ஆற்றும் வெந்தயக்கீரை சாம்பார்..

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை – 2 சிறுகட்டு,
துவரம்பருப்பு – ஒரு கப்,
புளி – எலுமிச்சைப் பழ அளவு,
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.

* புளியை கரைத்து கொள்ளவும்.

* வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும்.

* வாணலியில் கரைத்த புளியைக் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்கவிட்டு, கீரை வெந்ததும் வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும்.

* எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: வெந்தயக்கீரை குளிர்ச்சி தரும்; வயிற்றுப்புண் ஆற்றும்.

மலபார் ஸ்பெஷல் அவல் பால்

மலபார் ஸ்பெஷல் அவல் பால் செய்து எப்படி?
மலபார் ஸ்பெஷல் அவல் பால்



தேவையான பொருட்கள்:

அவல் – 4 டேபிள் ஸ்பூன்

பூவம் பழம் – 1

சர்க்கரை – தேவையான அளவு

நெய் – 1/2 டீஸ்பூன்

பால் – 1 கப்

கிஸ்மிஸ் – சிறிது

செய்முறை: முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து, பின் அதனை இறக்கி ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் வாழைப்பழத்தைப் போட்டு, கையால் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஃப்ரிட்ஜில் உள்ள பாலை வாழைப்பழக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும், அவலை சேர்த்து வறுக்க வேண்டும்.

அடுத்து ஒரு டம்ளரில் சிறிது பாலை ஊற்றவும், பின் சிறிது அவல் போட்டு, மீண்டும் பால் ஊற்றி, பின் அவல் போட்டு, மற்றொரு முறை பால் ஊற்றி, மீண்டும் அவல் போட்டு, மேலே கிஸ்மிஸ் தூவினால், அவல் பாலை ரெடி!!!

ருசியான தக்காளி குருமா

ருசியான தக்காளி குருமா செய்வது எப்படி...!!

ருசியான தக்காளி குருமா



தேவையான பொருட்கள் :

தக்காளி – 2
வெங்காயம் – 1
எண்ணெய் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு

அரைக்க :

தேங்காய் – 2 பத்தை
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
ப.மிளகாய் – 3
பூண்டு – 4 பல்
முந்திரி அல்லது பாதாம் – 10

தாளிக்க :

கடுகு, பெருஞ்சீரகம், மிளகு – தலா அரை ஸ்பூன்

செய்முறை :

* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் பாதியாக வதங்கியதும் அதில் தக்காளியை போட்டு சிறிது வதக்கிய பின் அரைத்து வைத்த மசாலா, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கவும்.

* கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* சுவையான தக்காளி குருமா ரெடி.

* இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.

சின்ன சின்ன சமையல் டிப்ஸ்

சின்ன சின்ன சமையல் டிப்ஸ்...!!


தயிர் புளிக்காமல் இருக்க...

தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.

கீரை பசுமையாக ருசியாக இருக்க...

கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

முட்டை கெடாமல் இருக்க...

முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும்.

உருளைக்கிழங்கு கெடாமல் இருக்க...

உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும்.

ஸ்வீட் செய்த பின்...

ஸ்வீட் செய்து இரும்பு அல்லது அலுமினியத் தட்டில் தான் கொட்ட வேண்டும். எவர்சில்வர் தட்டு சரிப்படாது.

கைகளில் ஏற்படும் வாடையை போக்க
வெங்காயம் நறுக்கிய பிறகும், பூண்டு உரித்த பிறகும் கைகளில் ஏற்படும் வாடையை போக்க கைகளை stainless steel ஸ்பூன்களில் தேயுங்கள்.

பிரியாணி அடிப்பிடித்து விட்டால்...

பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும்.

பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்க...

பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும்.

பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பசையை நீக்க...

சமைத்த பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக சுத்தம் செய்ய அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போடுங்கள்.

சப்பாத்திகள் மென்மையாக இருக்க...

சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வெந்நீரில் பிசையவும். சிறிது பாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

பூரி நமத்துப் போகாமல் இருக்க...

பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்

ரசம், சாம்பார், கீரை மசியலை இறக்கிய பின், பெருங்காயத் தூள் போட்டால் மணம் ஊரைத் தூக்கும்.

கொத்துமல்லி, புதினா துவையல்கள் அரைக்கும் போது, தண்ணீருக்குப் பதில் சிறிது தயிர் சேர்த்தால் சுவை தரும்.

கத்தரிக்காய் கூட்டு, பொரியல் செய்யும்போது கொஞ்சம் கடலை மாவைத் தூவிப் பாருங்கள். கூட்டு, பொரியல் சுவையாக இருக்கும்.

மைக்ரோ வேவ் ஓவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஓவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க "பளிச்'சென்று இருக்கும்.

பீட்ரூட் நறுக்கும்போது கைகளில் கறை ஒட்டுவதைத் தடுக்க, பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்பு தோலை எடுத்துவிட்டு துண்டுகளாக்கினால் கறை ஒட்டாமல் இருப்பதோடு, காய் நறுக்குவதற்கும் எளிதாக இருக்கும்.

அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் அப்பிக் கொண்டிருக்கிறதா? கவலை வேண்டாம். டைல்ûஸ சாதாரணத் துணியாலோ அல்லது டிஷ்யூ பேப்பராலோ துடைத்து எடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்துப் பாருங்களேன். "பளிச்' சென்று ஆகிவிடும்.

கண்ணாடி பாட்டில் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் கடுகைப் போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவுங்கள். துர்நாற்றம் போய்விடும்.

கேரட் அல்வா செய்யும்போது கேரட்டைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த தண்ணீரில் சிறிதுநேரம் வைத்துத் தோலைச் சீவினால் மிகச் சுலபமாகத் தோலை நீக்கிவிடலாம்.

வடைக்கு அரைக்கும்போது மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் ஒரு தேக்கரண்டி நெய் விட்டால் மாவு இறுகிவிடும்.

பஞ்சு போன்ற இட்லிக்குக் கிரைண்டரில் உளுந்தம் பருப்பு பாதி மசிந்ததும் ஏழெட்டு ஐஸ் க்யூப்களைப் போட்டு அரையுங்கள். மாவும் அதிகம் வரும். இட்லியும் பூப்போல மெத்தென்றிருக்கும்.

பாசிப்பருப்பு கடையல்

பாசிப்பருப்பு கடையல் செய்வது எப்படி என்று பார்போமா..??

பருப்பு வகைகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் பருப்புக்களில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசியமான சத்துக்கள் ஏராளமாக உள்ளன.

அதிலும் பாசிப்பருப்பை கடைந்து சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும்.

பேச்சுலர்களுக்கு இந்த சமையல் மிகவும் எளிமையாக இருக்கும். சரி, இப்போது அந்த பாசிப்பருப்பு கடையலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு… நெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை நன்கு நீரில் கழுவி, பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான நிலையில் வைத்து 15-20 நிமிடம் நன்கு பருப்பை வேக வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும். பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அத்துடன் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், பாசிப்பருப்பு கடையல் ரெடி!!!

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெந்தயக்களி

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெந்தயக்களி..!

தேவையான பொருட்கள்

வெந்தயம் – 500 கிராம்

பச்சரிசி மாவு – 200 கிராம்

வெல்லம் – 100 கிராம் (தூளாக்கவும்)

சுக்குதூள் – அரை தேக்கரண்டி ஏலக்காய் –2 (தூளாக்கவும்)

நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

* வெந்தயத்தை வறுத்து தூளாக்குங்கள்.

* அரிசி மாவில், வெந்தயத்தூள், தண்ணீரை கலந்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.

* பாத்திரத்தில் வெல்லத்தைக்கொட்டி நீர் கலந்து, பாகுஆக்கி வடிகட்டி எடுக்கவும்.

* கரைத்து வைத்துள்ள மாவை வாணலியில் கொட்டி நன்கு கிளற வேண்டும். வெந்து வரும்போது வடிகட்டி வைத்துள்ள வெல்ல பாகுவை கலந்து கிளறவேண்டும்.

மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரவேண்டும். பச்சை தண்ணீரில் விரலை விட்டுவிட்டு மாவை தொட்டால் அது விரலில் ஒட்டக்கூடாது. அதுவே சரியான பதம்.

* பின்பு அதில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி சுக்கு தூள், ஏலக்காய் தூள் கலந்திடுங்கள்.

* லேசான சூட்டில் சாப்பிடுங்கள்.

* இது உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். பருவம் எய்திய பெண்களுக்கு உடல்சூடு காரணமாக வெள்ளைப்படுதல் உண்டாகும். அதனால் அவர்கள் மெலிந்துபோவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு வாரம் இரு முறை வெந்தயக்களி தயார் செய்து கொடுக்கவேண்டும். இது உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கும்.

எலும்புகள் நன்கு வளர்ச்சியடையும். தலைமுடி உதிர்வது குறையும்.

தேங்காய் லட்டு

குழந்தைகளுக்கான சுவையான தேங்காய் லட்டு..!!

தேங்காய் லட்டு செய்யலாமா..

தேவையான பொருட்கள் :-

தேங்காய் துருவல் - 2 கப்
பால் - 2 கப்
சீனி - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
பதாம் பருப்பு - 10
பட்டர் - 2 தேக்கரண்டி

செய்முறை :-

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

கொதித்ததும் அதில் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி 10 - 15
நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

பின்னர் சீனி சேர்த்து , சீனி கரையும்வரை கிளறி ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

மிதமான சூட்டில் இருக்கும் போது கையில் பட்டரை தடவி லடடுகளாக பிடித்து அதன்மீது பதாம் பருப்பை வைக்கவும்.

சுவையான தேங்காய் லட்டு ரெடி

தேங்காய் பர்ஃபி

தேங்காய் பர்ஃபி...!!!

தேங்காய் பர்ஃபியை கடையில் வாங்காமல் வீட்டிலேயே எளிமையாக செய்து சாப்பிடலாம். அதிலும் மாலை வேளையில் இதனை செய்தால், வீட்டில் உள்ள குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் அல்லவா! சரி, இப்போது அந்த தேங்காய் பர்ஃபியை எப்படி வீட்டிலேயே ஈஸியாக செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
தண்ணீர் - 1/4 கப்
நறுக்கிய முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 4 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்



செய்முறை:

ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கித் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு தட்டில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி தடவி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு நான்-ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும்.

சர்க்கரை நன்கு கரைந்து, ஓரளவு கெட்டியாக வரும் போது, அதில் துருவிய தேங்காயை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

அப்படி கிளறிவிடும் போது, நுரைக்க ஆரம்பிக்கும் தருணத்தில் முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து 3-5 நிமிடம் கிளறி, ஓரளவு கெட்டியாகும் போது அடுப்பில் இருந்து இறக்கி தட்டில் அக்கலவையைக் கொட்டி பரப்பி, கத்தியால் துண்டுகளாக்கினால், தேங்காய் பர்ஃபி ரெடி.

கொத்தமல்லி சாதம்

கொத்தமல்லி சாதம்...!!!

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்
கொத்தமல்லி - 1 கட்டு
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
பட்டை, லவங்கம் - 1
ஏலக்காய் - 1
முந்திரி, உப்பு, நெய் - தேவையான அளவு



செய்முறை:

பச்சை கொத்தமல்லியை சுத்தம் செய்து அலசி பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ப்ரஷர் பேனில் நெய்விட்டு காய்ந்ததும் பட்டை லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிறகு அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து நன்கு வதங்கியப்பின் 4 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடவும்.

தண்ணீர் கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு கிளறி ' ஸ்டீம்' வந்ததும் 'வெய்ட்' போடவும் அடுப்பை 'சிம்மில்' 10 நிமிடம் வைத்து எடுக்கவும். 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி பரிமாறவும்.

நிறம் மற்றும் சுவை நிறைந்த மணமுள்ள கொத்தமல்லி சாதம் தயார்.

மின்ட் - டொமேட்டோ பிரியாணி

மின்ட் - டொமேட்டோ பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், பழுத்த தக்காளி - 8, புதினா - ஒரு கட்டு, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பட்டை - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளியை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து... வெங்காயம், புதினா, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், கரம்மசலாத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, இரண்டரை கப் நீர் சேர்க்கவும். நீர் நன்கு கொதித்ததும் பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி, ஆவி வந்ததும் வெயிட் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

தக்காளி - பனீர் பிரியாணி

தக்காளி - பனீர் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 2, நாட்டுத் தக்காளி - 3, பனீர் துண்டுகள் - 150 கிராம், பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், நெய் - தலா ஒன்றரை டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். பனீர் துண்டுகளை சதுர சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய பனீர் துண்டுகள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், கீறிய பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து மூன்றரை கப் நீர் சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து மூடி, ஆவி வந்ததும் வெயிட் போட்டு `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். பின்னர் திறந்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்

பிரிஞ்சால் பிரியாணி

பிரிஞ்சால் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பெரிய வெங்காயம், நாட்டுத் தக்காளி - தலா 2, சின்ன கத்திரிக்காய் - 6, பூண்டு - 8 பல், தனி மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகிய வற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். சின்ன கத்திரிக்காயை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை தாளித்து... பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கத்திரிக்காய், பூண்டு, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, சிறிதளவு நீர் தெளித்து மூடி போடவும். கத்திரிக்காய் வெந்ததும் உதிராக வடித்த சாதம் சேர்த்து நன்றாக கிளறி, கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

வாழைப்பூ உருண்டை பிரியாணி

வாழைப்பூ உருண்டை பிரியாணி

தேவையானவை - வாழைப்பூ உருண்டை செய்ய: வாழைப்பூ (மீடியம் சைஸ்) - ஒன்று, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பூண்டு - 6 பல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, முந்திரி - 6, பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை - அரை கப், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, பெரிய வெங்காயம் - 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

பிரியாணி செய்ய: பாசுமதி அரிசி - 2 கப், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா - ஒரு கைப்பிடி அளவு , வெங்காயம் - 2, நாட்டுத் தக்காளி - 3, பச்சை மிளகாய் - 3, பட்டை - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று, தேங்காய்ப்பால் - 2 கப், உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூ உருண்டை செய்யக் கொடுத்துள்ள பொருட்களில் வாழைப்பூவை நன்கு ஆய்ந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், முந்திரி, பெருஞ்சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் நைஸான விழுதாக அரைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் வாழைப்பூ உருண்டைக்கான அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்று சேர்த்து, நன்கு பிசிறி, சிறிய உருண்டைகளாக உருட்டவும். எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பிரியாணி செய்யக் கொடுத்துள்ள பொருட்களில் கொத்தமல்லித்தழை, புதினாவை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். வெங்காயத்தை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தேங்காய்ப்பால், ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். நீர் நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்க்கவும். நன்கு ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும். குக்கரைத் திறந்ததும் நன்றாக கிளறி, பொரித்து வைத்துள்ள வாழைப்பூ உருண்டைகளை சேர்த்துக் கலந்து சுடச்சுட பரிமாறவும்.

சீஸ் பிரியாணி

சீஸ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 6 பல், துருவிய சீஸ் - அரை கப், நெய்யில் வறுத்த முந்திரி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு, தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு... காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உதிர் உதிராக வடித்த சாதம், துருவிய சீஸ், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

இனிப்பு உளுந்து வடை

இனிப்பு உளுந்து வடை

தேவையானவை:

முழு உளுந்து - 150 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 3
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க‌த் தேவையான அளவு

செய்முறை:

உளுந்தைக் கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீர் வடித்து மிக்ஸியில் சர்க்கரை, ஏலக்காயோடு சேர்த்து தண்ணீர் இல்லாமல் பேஸ்டாக அரைக்கவும். தேவைப்பட்டால், தண்ணீரை லேசாகத் தெளித்துக் கொள்ளலாம். மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், தீயை மிதமாக்கவும். இனி, உள்ளங்கையில் தண்ணீர் தொட்டு மாவை எடுத்து, உள்ளங்கையில் வைத்து வடை வடிவத்துக்கு தட்டி எண்ணெயில் விட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக விட்டு எடுத்து கிச்சன் டவலில் வைக்கவும். அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சப்பட்ட பிறகு இதை வாழைப்பழத்துடன் பரிமாறவும். வடை செய்த பிறகு இரண்டு மணி நேரம் கழித்து பரிமாறினால் சுவை அதிகமாகும்.

மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய்

தேவையானவை:

மாங்காய் -100 கிராம் (விருப்பமான சைஸில் நறுக்கவும்)
மஞ்ச‌ள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு தாளித்து உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் மாங்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கினால், மாங்காய் நறுக்கென இருக்கும். மிருதுவாக வரவேண்டுமானால் மேலும் ஒரு நிமிடம் கிளறி, இறக்கினால் மாங்காய் ஊறுகாய் ரெடி.

கீரைக் கடைசல்

கீரைக் கடைசல்

தேவையான பொருட்கள்:

அரைக்கீரை அல்லது முளைக்கீரை - 1 கட்டு
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
பூண்டு - 4 பல்
உப்பு - தேவையான அளவு



தாளிக்க:

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 2
பூண்டு - 6 பல்

செய்முறை:

கீரையை நன்றாகச் சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் கீரையைச் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கி ஆற விடவும். பிரஷர் போனதும், குக்கரைத் திறக்கவும்.பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து பூண்டு தட்டி போட்டு, இந்தக் கீரை கலவையுடன் கலக்கவும்.

வாய்க்கு ருசியான இந்தக் கீரை கடைசல் பெரியவர்களுக்கு மலச்சிக்கலைத் தவிர்க்கும். கீரையில் வைட்டமின் சத்துக்கள் நிறையவே உண்டு. சீரகம் சீரண சக்தியைக் கொடுக்கும். இதனால் இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதும் நல்லது.

மஷ்ரூம் தோசை

மஷ்ரூம் தோசை

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்

மசாலா தயாரிக்க:

மஷ்ரூம் - 200 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

அரைத்துக் கொள்ள:

இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) -2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளப் பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும். மஷ்ரூமை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.வெங்காயம், தக்காளி இவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு மஷ்ரூம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி மிதமான தீயில் வைக்கவும். இந்தக் கலவை நன்கு சுருள வதங்கியதும், கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

பிறகு, தோசைமாவுடன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து, தோசைக் கல்லில் தோசையை வார்க்கவும். முக்கால் பதம் வெந்ததும் மஷ்ரூம் கலவையை தோசையின் ஒரு பாதி அளவுக்குத் தடவிக் கொள்ளவும். தோசை வெந்ததும் மறு பாதியை மடித்து மூடி விடவும். இந்த தோசைக்குத் தொட்டுக்கொள்ள தனியாக சைட் டிஷ் எதுவும் தேவையில்லை.

மஷ்ரூமில் உள்ள புரதச்சத்து குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. பீட்சா, பர்கர் என விரும்பும் குழந்தைகள் இதன் ருசிக்கு மயங்கி விடுவார்கள். விருப்பப்பட்டால், சீஸ் தடவிக் கொடுக்கலாம்.

வெள்ளரிப் பிஞ்சு சாட்

வெள்ளரிப் பிஞ்சு சாட்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய வெள்ளரிப் பிஞ்சு - அரை கப், அரிசிப்பொரி - 6 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய மாங்காய் - 4 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று, பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 4 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு... வெங்காயம், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, தக்காளி சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிடவும். அந்த சூட்டிலேயே குடமிளகாய், அரிசிப்பொரி, மாங்காய் சேர்த்து, இறுதியில் வெள்ளரிப்பிஞ்சையும், கொத்தமல்லித்தழையையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

சைனீஸ் ஃப்ரைடு ரைஸ்

சைனீஸ் ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை:

பாசுமதி அரிசி - ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கோஸ் - ஒரு கப், குடமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, பூண்டு - 3 பற்கள், வெங்காயத்தாள் - ஒரு கட்டு (நறுக்கவும்), சோயா சாஸ் - 2 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

கோஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். சிறிதளவு வெங்காயத்தாளை தனியே எடுத்து வைக்கவும். பாசுமதி அரிசியுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, தேவையான நீர்விட்டு மலர வேகவைத்துக் கொள்ளவும். அகலமான கடாயில் மீதமுள்ள ஆலிவ் எண்ணெயை ஊற்றி... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தாள், கோஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். தீயைக் குறைத்து, பாசுமதி அரிசி சாதத்தை சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும். தனியே எடுத்து வைத்த வெங்காயத்தாளைத் தூவி பரிமாறவும்.

வத்த குழம்பு பொடி.

வத்த குழம்பு பொடி.

தேவையானப்பொருட்கள்:

காய்ந்த மிளகாய் - 6
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 4 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 முதல் 2 டீஸ்பூன் வரை

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணை விட்டு, அதில் மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக சிவக்க வறுத்தெடுத்து, ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு, நன்றாக பொடித்து எடுக்கவும்.

மேற்கூறிய அளவிற்கு, 5 அல்லது 6 பேருக்கு தேவையான குழம்பு தயாரிக்கலாம்.

எலுமிச்சம் அளவு புளியை ஊற வைத்துக் கரைத்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, அதில் இந்தப் பொடியைச் சேர்த்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு, கடுகு, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை, நல்லெண்ணையில் தாளித்துக் கொட்டினால், சுவையான வத்தக் குழம்பு தயார்.

அதிகமாக பொடித்து வைத்துக் கொண்டால், தேவையான பொழுது உபயோகித்துக் கொள்ளலாம்

வெண்டைக்காய் சூப்

வெண்டைக்காய் சூப்...!!!

தேவையானவை:

வெண்டைக்காய் - 4 (பெரியதாக நறுக்கவும்), சாதம் - ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெயை விட்டு, சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு நன்கு வதக்கி, தண்ணீர் ஊற்றி, சாதம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள்சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறக்கி பரிமாறவும்.
தேவைப்பட்டால் ஒரு முட்டையை நன்கு கலக்கி சேர்க்கலாம் (நன்கு சூடாக இருக்கும்போதுதான் முட்டையைச் சேர்க்க வேண்டும்).

காய்கறி சூப்

காய்கறி சூப்...!!!

தேவையானவை:

பீன்ஸ் - 10, கேரட் - ஒன்று, கோஸ் - 50 கிராம், வெங்காயம் - ஒன்று, பூண்டு - ஒரு பல், வெண்ணெய், மைதா மாவு (அ) சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, பால் - ஒரு சிறிய கப், நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து மேலும் வதக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, காய்கறிகள் வெந்தவுடன் சோள மாவு (அ) மைதா மாவை பாலில் கரைத்து சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து, இறக்கி பரிமாறவும்

எலுமிச்சை சூப்

எலுமிச்சை சூப்..!!!

தேவையானவை:

எலுமிச்சம் பழம் - 3 (சாறு எடுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, இஞ்சி - சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். இதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் (ரொம்ப தண்ணியாக இருந்தால் சோள மாவு கரைத்து சேர்த்து கெட்டியாக்கிக் கொள்ளவும்). அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும். சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால், சூப் சூடாக இருக்கும்போதே இரண்டு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சூப்பில் ஊற்றிக் கிளறி பரிமாறலாம்.

மிளகு சூப்

மிளகு சூப்..!!!

தேவையானவை:

துவரம்பருப்பு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, உருளைக்கிழங்கு - ஒன்று (சதுரமாக நறுக்கி கொள்ளவும்), ஆப்பிள் - அரை துண்டு (சதுரமாக வெட்டவும்), தேங்காய் துருவல் - அரை கப் (பால் எடுக்கவும்), பூண்டு - 3 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, எலுமிச்சைச் சாறு, வெண்ணெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
கறிப்பொடிக்கு: பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, மிளகு - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - 3 டீஸ்பூன், மஞ்சள் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 10, சோம்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை:

கறிப்பொடிக்கு கொடுத்துள்ளவற்றை தனித் தனியாக வறுத்து ஒன்று சேர்த்து பொடித்துக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் கறிவேப்பிலையை போட்டு, பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய ஆப்பிள், உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் கறிப்பொடி சேர்த்து, துவரம்பருப்பை கழுவி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து தேங்காய்ப் பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
இது, சாதத்துடன் கலந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்

உருளைக்கிழங்கு சூப்

உருளைக்கிழங்கு சூப்..!!!

தேவையானவை:

வேக வைத்து, தோலுரித்த உருளைக்கிழங்கு - ஒரு கப் வெண்ணெய், மைதா மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கிரீம், சீஸ், பால் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் வெண்ணெய் சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி, மைதா மாவை சிறிது சிறிதாக தூவி வறுத்து அடுப்பிலிருந்து இறக்கவும். இதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கட்டியில்லாமல் கிண்டி மறுபடியும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். (சூப் கெட்டியாக இருந்தால் காய்கறி வேக வைத்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்). இதில் உப்பு, மிளகுத்தூள், சீஸ் சேர்த்து, சீஸ் உருகும் வரை வைத்திருந்து இறக்கி, கிரீமுடன் பரிமாறவும்.
குறிப்பு: உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறிது எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து சேர்த்தும் சூப் செய்யலாம்.

தக்காளி சூப்

தக்காளி சூப்..!!!

தேவையானவை:

தக்காளி - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், பால், நறுக்கிய கொத்தமல்லி தழை - தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி... அதில் நறுக்கிய தக்காளியுடன், ஒரு பெரிய வெங்காயத்தை பெரியதாக நறுக்கிப் போட்டு வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை சூடாக்கி, மற்றொரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்த தக்காளி - வெங்காய சாறை ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். சோளமாவை பாலில் கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி... உப்பு, மிளகுதூள், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, இறக்கவும்

திடீர் சூப்.

திடீர் சூப்...!!!

தேவையானவை:
கேரட் - ஒன்று, பீன்ஸ் - 5, கோஸ் - 50 கிராம், நறுக்கிய பூண்டு - இஞ்சி - 2 டீஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கிக் கொள்ளவும்), செலரி - ஒன்று, புரூக்கோலி - சிறிதளவு, சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் ஆலிவ் ஆயில், கொத்தமல்லி தழை - தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெயை காயவைத்து... நறுக்கிய பூண்டு - இஞ்சியை வதக்கி, அதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், கோஸ், பீன்ஸ், செலரி, புரூக்கோலி சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்க விடவும். தேவைப்பட்டால் சோள மா¬வை கரைத்து ஊற்றி கெட்டியாக்கி இறக்கி, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

முளைகட்டிய நவதானிய சூப்

முளைகட்டிய நவதானிய சூப் !!!

தேவையானவை:

முளைகட்டிய பயறுகள் (டிபார்ட்மென்ட் கடைகளில் எல்லாம் சேர்ந்த பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - காரத்துக்கேற்ப, கொத்தமல்லி தழை - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் - ஒரு கப், புளிக்காத கெட்டி தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். காடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

பூண்டு சூப்

பூண்டு சூப் !!!

தேவையானவை:
முழுப்பூண்டு - 2 (தோலுரிக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தண்ணீர் - அரை லிட்டர், மைதா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், கிரீம் அல்லது கெட்டித் தயிர் - சிறிதளவு, ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெயை சூடாக்கி, உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். இதில் சிறிது எடுத்து தனியே வைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். மைதாவையும் சேர்த்து வறுத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிஇல்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். பூண்டு நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, தனியாக எடுத்து வைத்த வறுத்த பூண்டு, கிரீம் (அ) தயிர் சேர்த்துப் பரிமாறவும்.

30 வகை டயட் சமையல்

30 வகை டயட் சமையல்


 வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.!!

“நாலுபடி ஏறுனதுக்கே இப்படி மூச்சு வாங்குது. ‘வெயிட்டக் குறைங்க, வெயிட்டக் குறைங்க’னு டாக்டர் சொல்றாரு. என்னென்னமோ செஞ்சுப் பாத்துட்டேன்… வெயிட் குறைய மாட்டேங்குது” நம்மில் பலர் இப்படி புலம்பிக் கொண்டும்…
“இவ மட்டும் எப்பப் பார்த்தாலும் ‘சிக்’னு இருக்காளே… என்ன மாயா ஜாலம் பண்றா?” என்று சிலரைப் பார்த்து ஏங்கிக் கொண்டும் இருக்கிறோம்.
உடல் எடை கூடுவதற்கு அதிகப்படியான கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்து மற்றும் சில கெமிக்கல்கள் உடம்பில் தங்கி விடுவதுதான் காரணம் என்பது நிபுணர்களின் கருத்து. அதிகப்படியான இந்தச் சத்துக்கள் உடலில் தங்குவதற்குக் காரணம்… நம்முடைய வழக்கமான சாப்பாடு முறைதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரிசியை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் நாம், தானியங்கள், காய்கறி மற்றும் பழங்களை அவ்வளவாக எடுத்துக் கொள்வதில்லை.
‘இந்த ரொட்டீன் சாப்பாட்டு முறையை மாற்றி, தினசரி உணவில் வெரைட்டியான உணவுகளை செய்து சாப்பிட்டால் உடல் பருமன் பிரச்னை வராது’ என்பது மருத்துவர்களின் அறிவுரை.
இதையெல்லாம் அலசி ஆராயும் சேலம், சேர்வராய்ஸ் கேட்டரிங் கல்லூரி முதல்வர் கா.கதிரவன், ”நெகட்டிவ் கலோரி உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீராக இருக்கும். அதாவது, நாம் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரியைவிட, அதை எரிப்பதற்காக நம் உடல் செலவிடும் கலோரியின் அளவு இருமடங்காக இருக்கவேண்டும். அதுதான் நெகட்டிவ் கலோரி உணவுப் பொருள். இத்தகைய நெகட்டிவ் கலோரி உணவு ரெசிபி என்னிடம் ஏகப்பட்டவை இருக்கின்றன. அவற்றைச் சாப்பிட்டே, 4 மாதத்தில் 18 கிலோ எடையைக் குறைத்திருக்கிறேன்” என்று தன்னுடைய அனுபவத்தைச் சொல்வதோடு, அத்தகைய உணவுகளில் 30 வகையை இங்கே உங்களுக்காக சமைத்துக் காண்பித்திருக்கிறார்.
“தினசரி உணவில் இதில் ஏதாவது ஒன்றைக் கட்டாயம் சேர்த்து வாருங்கள், உடல் எடையில் மாற்றம் காண்பீர்கள். ‘சிக்’கென்று இருப்பவர்களிடம், அந்த ரகசியத்தைக் கேட்டுப் பாருங்கள் நான் சொல்வதில் இருக்கும் உண்மை புரியும்” என உறுதியாகச் சொல்கிறார் கதிரவன்.
ஜஸ்ட் ட்ரை… ஹெவ் எ ஹெல்தி லைஃப்!
———————————————————————————————-
முட்டைகோஸ் சூப்
தேவையானவை: முட்டைகோஸ் – கால் கிலோ, மிளகு, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும், நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். பிறகு, தண்ணீர் விட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து, கால் மணிநேரம் கொதிக்க விடவும். வாசம் வந்ததும், இறக்கி வடிகட்டி, மிதமான சூட்டில் பரிமாறவும்.
குறிப்பு: காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகி வர, உடல் கொழுப்பு கரையும்.
———————————————————————————————————
ஃப்ரூட்ஸ் அடை
தேவையானவை: அரிசி – ஒரு கப், உளுந்து – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், அன்னாசி – ஒரு கப், திராட்சைப்பழம் – ஒரு கப், கடலைப்பருப்பு – 100 கிராம். உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, உளுந்தைத் தனித் தனியாக ஊற வைத்துக் கழுவிக் கொள்ளவும். மூன்றையும் ஒன்றாக்கி அரைத்துக் கொள்ளவும். மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து, நறுக்கிய ஆப்பிள், அன்னாசியையும் திராட்சையையும் சேர்த்துக் கலக்கவும். இதை தோசைக்கல்லில் அடை களாக வார்த்து, சிறிது எண்ணெயை இருபுறமும் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்க… வாசனையான ஃப்ரூட்ஸ் அடை தயார்.
குறிப்பு: அடை சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். சத்துகள் நிரம்பிய லைட்டான டிபன் இது!
—————————————————————————————-
பழ பாயசம்
தேவையானவை: ஆரஞ்சு (உரித்து கொட்டை நீக்கியது) – 1, நறுக்கிய அன்னாசி – 2 துண்டுகள், மாதுளை முத்துக்கள் – கால் கப், நறுக்கிய சிறிய கொய்யா – 1, திராட்சை – 20, பால் – ஒரு கப், சுகர் ஃப்ரீ சர்க்கரை – தேவையான அளவு, சேமியா – 100 கிராம்.
செய்முறை: பழங்களை நன்கு கழுவிக் கொள்ளவும். அவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டவும். வடிகட்டிய ஜுஸ§டன் காய்ச்சி ஆற வைத்த பால், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து தனியே வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதித்ததும் சேமியாவை சேர்த்து வேக வைத்து இறக்கி, ஜூஸ§டன் சேர்த்து நன்கு கலந்தால், பழ பாயசம் ரெடி!
குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள் ஸ்வீட் சாப்பிட ஆசைப்படும்போது குறைந்த கலோரிகள் உள்ள இதனைச் செய்து சாப்பிடலாம்.
—————————————————————————————————
கம்பு ரொட்டி
தேவையானவை: கம்பு மாவு – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், பச்சை மிளகாய் – 4, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கம்பு மாவில் சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை வார்த்து, கனமான ரொட்டிகளாக சுட்டெடுக்கவும். சுட்ட ரொட்டிகளை சிறு சிறு துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி, கம்பு ரொட்டித் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: காலை நேர டிபனுக்கு உகந்தது. அதிக நேரம் பசி தாங்கும் என்பதால் நொறுக்ஸ் சாப்பிடும் எண்ணம் தோன்றாது.
—————————————————————————————————–
பட்டாணி கேரட் அடை
தேவையானவை: பட்டாணி – கால் கிலோ, மெல்லியதாக நறுக்கிய கேரட் – ஒரு கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, நறுக்கிய கொத்தமல்லி – அரை கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பட்டாணியை ஊற வைத்துக் கழுவி மிக்ஸியில் நன்கு அரைக்கவும். அந்த மாவில்… நறுக்கிய கேரட், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும். அடைகளாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: பட்டாணியில் புரோட்டீன் சத்து அதிகமுள்ளது, கேரட்டில் ‘விட்டமின் ஏ’ அதிகமுள்ளது. இவை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்கிறது.
———————————————————————————
பருப்புக் கூட்டு
தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், தக்காளி – 2, வெங்காயம் – 1, குடமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 4 பல், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைக்கவும். ஊற வைத்த பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பாத்திரத்தில் போட்டு நன்கு வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், நசுக்கிய பூண்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி வெந்து கரைந்ததும், வேக வைத்த பருப்பைச் சேர்க்கவும். எல்லாம் கலந்து வாசனை வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: சாதம், சப்பாத்திக்கு சரியான ஜோடி. புரோட்டீன் சத்து நிறைந்தது. தினமும் துவரம்பருப்பு சாம்பார் செய்வதற்கு சிறந்த மாற்று முறைக் கூட்டு.
—————————————————————————————-
மிளகு தானிய சூப்
தேவையானவை: ஊற வைத்த பாசிப்பருப்பு – 100 கிராம், மிளகு – ஒரு டீஸ்பூன், பிரியாணி இலை – 2, வெங்காயம் – 2, நறுக்கிய கேரட் – கால் கப், சீரகம், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, பிரியாணி இலை தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், கேரட், ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கியவுடன், எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: இது பசியைத் தூண்டும். வயிறு மந்தம் சம்பந்தபட்ட பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு இதை அருந்தலாம்.
——————————————————————-
காய்கறி உப்புமா
தேவையானவை: ரவை – ஒரு கப், தயிர் – முக்கால் கப், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு கலவை – ஒரு கப், தக்காளி – 2, வெங்காயம் – 50 கிராம், பச்சை மிளகாய் (நறுக்கியது) – 2, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, சீரகம் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி போட்டுக் கலந்து, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து அரை பதத்தில் வேக விடவும். இந்தக் காய்கறி கலவையுடன் வறுத்த ரவையைச் சேர்த்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால், தண்ணீர் விட்டு வேக விடவும். இறக்குவதற்கு முன், தயிர் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.
குறிப்பு: அனைத்து சத்துகளும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் டிபன் இது! அதிக கலோரி இல்லாததால் டயட்டுக்கும் சத்துக்கும் உகந்தது.
———————————————————————
தினை மாவு அடை
தேவையானவை: தினை மாவு – ஒரு கப் (பெரிய மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்), கடுகு-சிறிதளவு, வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுந்து – தலா கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை: கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊற வைக்கவும். கழுவி, நன்கு அரைத்து, தினை மாவுடன் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை தாளித்து, அதை அடை மாவில் கொட்டிக் கலக்கவும். தேங்காய் துருவல். உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்த மாவை, தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: இந்த அடை நிறைய நேரம் பசி தாங்கும். அனைத்துவிதமான சத்துக்களும் இதில் அடங்கியிருப்பதால் ஊட்டச் சத்து மிக்க சிறந்த பலகாரம்.
———————————————————
பட்டாணி காலிஃப்ளவர் கூட்டு
தேவையானவை: பச்சைப் பட்டாணி – ஒரு கப், துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவர் – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவரை தனித்தனியாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, உப்பு சேர்க்கவும். எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்த பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் உள்ளதால் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்.
——————————————————————
கொண்டைக்கடலை மசாலா
தேவையானவை: கொண்டைக்கடலை – 200 கிராம், நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா 2, சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் – முக்கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கொண்டைக்கடலையை ஊற வைத்துக் கழுவி, வேக வைத்து தனியே எடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம் தாளித்து, தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பச்சை வாசனை போனதும், சாட் மசாலாத்தூளை சேர்த்து நன்கு கலந்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்க விடவும். நல்ல வாசனை வந்ததும், வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து, லேசாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.
குறிப்பு: சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள நல்ல சைட் டிஷ். இதை, காலை நேரத்தில் சாப்பிடுவது உடல் வலுப்பெற உதவும்.
————————————————————————–
புளிப்பு இனிப்பு காளான்
தேவையானவை: காளான் – அரை கப், நன்கு கழுவி நறுக்கிய கேரட், குடமிளகாய், பீன்ஸ், காலிஃப்ளவர், உரித்த பட்டாணி கலவை – அரை கப், வெங்காயம் – 1, தக்காளி சாஸ், சர்க்கரை – தேவையான அளவு, கரம் மசாலா – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சுடுநீரில் காளானைக் கழுவி, தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய காய்கறி மற்றும் பட்டாணிக் கலவையை வேக வைத்து, ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். காளான் தண்டை நீக்கிவிட்டு, அரைத்த விழுதை அந்த இடத்தில் வைத்து ஸ்டஃப் செய்யவும். தக்காளி சாஸ§டன் சர்க்கரையைக் கலந்து கொள்ளவும். ஸ்டஃப் செய்த காளன் மேல் தக்காளி சாஸைத் தடவவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் போட்டு சிவக்க வறுத்து, சாஸ் தடவிய காளனையும் போட்டு மென்மையாக வதக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள், அனைத்து விட்டமின்களும், தாது சத்துக்களும் நிறைந்த இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதைக் கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு வரும்.
————————————————————————
முளைகட்டிய தானிய சப்பாத்தி
தேவையானவை: பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை – தலா ஒரு கப், மைதா – கால் கிலோ, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும். முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். மைதா மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும். தேய்த்த பரோட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.
குறிப்பு: முளைகட்டிய தானியங்களில் அனைத்துச் சத்துக்களும் ஒருங்கே கிடைக்கும். இதனை காலை, இரவு நேர டிபனாக அடிக்கடி சாப்பிட்டு வர… சத்துக் குறைபாடுகள் நீங்கி, உற்சாகமாக இருக்க வைக்கும்.
வாழைப்பூ அடை
தேவையானவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப், அரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப், கடலைப்பருப்பு – கால் கப் வெங்காயம் – 3, கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்து, கடலைப்பருப்பைத் தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும். நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பத்தத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: வாழைப்பூ வடை, அதிக எண்ணெய் இழுக்கும். ஆனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த அடை, ஆரோக்கியமான உணவாகும். அதிக நேரம் பசி தாங்கும்.
————————————————-
பார்லி மசாலா சாதம்
தேவையானவை: பார்லி, பீன்ஸ் – தலா 100 கிராம், வெங்காயம், தக்காளி – தலா 2, பட்டை, கிராம்பு – தலா 1, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பார்லி, பீன்ஸை நன்கு ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, இஞ்சி- பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தாளித்துக் கொள்ளவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கியதும், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, எல்லாம் ஒன்றாகக் கலந்து வரும் வரை வதக்கவும். வேக வைத்த பார்லி, பீன்ஸை சேர்த்து நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: பார்லியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது; உடல் பருமனை குறைக்கும். பார்லியை வெறுமனே சாப்பிடப் பிடிக்காதவர்கள் இவ்வாறு செய்து சாப்பிட… சுவையாக இருக்கும்.
——————————————
சௌசௌ தர்பூசணி தோல் துவையல்
தேவையானவை: சௌசௌ தோல், தர்பூசணி தோல் கலவை – ஒரு கப், சின்ன வெங்காயம் – 10, கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சௌசௌ, தர்பூசணி தோலை நன்கு கழுவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் வறுக்கவும். கழுவிய காய்கறித் தோல், உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கலந்து பரிமாறவும்.
குறிப்பு: காய்கறிகளின் தோலின் அடிப்புறத்தில்தான் அதிகமான விட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்து இருக்கின்றன. அவற்றை நாம் சீவி, எறிந்து விடுவதால், முழுமையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இவ்வாறு துவையல் செய்து சாப்பிடுவதால் அந்தச் சத்துக்கள் கிடைக்கும். தோல் துவையலின் சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
———————————————————
உருளைக்கிழங்கு பருப்புக் கூட்டு
தேவையானவை: உருளைக்கிழங்கு – கால் கிலோ, கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், தக்காளி – 2, வெங்காயம் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக் கழுவிக் கொள்ளவும். கடலைப்பருப்பைக் கழுவி, இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும். பிறகு, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து, அது நன்கு கரையும் வரை வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கிரேவி பதம் வந்ததும், வேக வைத்தவற்றைச் சேர்த்துக் கலந்து மிதமான தீயில் வைத்து, 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
குறிப்பு: சாதம், சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக் கொள்ளலாம். காலை, மதிய நேரங்களில் இதைச் சாப்பிடுவதே உகந்தது.
———————————————————————-
மக்காச்சோள ரொட்டி
தேவையானவை: சோள மாவு – ஒரு கப் (பெரிய மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் காதிகிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்), மைதா மாவு – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சோள மாவு, மைதா மாவை ஒன்றாகக் கலக்கவும். உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதிக நேரம் ஊற வைக்கத் தேவையில்லை. பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக் கல்லில் போட்டு ரொட்டிகளாகத் தேய்த்துக் கொள்ளவும். சூடான தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: மக்காச்சோளத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது. ஆனால், உடல் எடை குறைப்புக்கு இது அதிகம் உதவும் என்பதால்தான், கார்ன்ஃப்ளேக்ஸ்கள் அதிகம் விற்கப்படுகின்றன. இப்படி ரொட்டி செய்து சாப்பிடும்போது மக்காச்சோளத்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.
————————————————————————
வீட் எனர்ஷி டிரிங்க்
தேவையானவை: கோதுமை, பாசிப்பருப்பு – தலா 100 கிராம், சின்ன வெங்காயம் – 5, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 3 பல், கொத்தமல்லி – சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கோதுமை, பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதனைக் கழுவி, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும் குக்கர் மூடியைத் திறந்து, வெந்த கோதுமை-பாசிப்பருப்பை வெளியே எடுக்கவும். இதை ஆற வைத்து, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: கோதுமையை வழக்கமான முறையில் இல்லாமல் இப்படி வித்தியாசமாக செய்து சாப்பிடும்போது, அதிலுள்ள முழுச் சத்தும் கிடைக்கிறது. மற்ற பானங்களைவிட, இது அதிக நேரம் பசி தாங்கும்.
—————————————————-
துவரம்பருப்பு சூப்
தேவையானவை: துவரம்பருப்பு – 100 கிராம், இஞ்சி, பூண்டு – தலா 5 கிராம், உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு, கொத்துமல்லி – சிறிதளவு, வெங்காயம் – 1.
செய்முறை: துவரம்பருப்பைக் கழுவி நன்றாக வேகவிடவும். வெந்ததும், வடிகட்டவும். வடிகட்டிய நீரில் அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து மிதமான தீயில் ஒருமுறை கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கியதும் பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவிக் கலந்து பரிமாறும்.
குறிப்பு: பசியைத் தூண்டும் தன்மையுள்ள, புரோட்டீன் சத்து நிறைந்த சூப் இது. உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் இதனைச் சாப்பிடலாம்.
——————————————————
வெஜ் ஃபிஷ் ஃப்ரை
தேவையானவை: நன்கு கழுவி, நீளமாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு கலவை – ஒரு கப், மைதா, கோதுமை மாவு – தலா கால் கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: கடாயில், எண்ணெய் விட்டு நறுக்கிய காய்களைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நன்கு வதங்கியதும், மைதா, கோது மாவை அதில் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, காய்கறி கலந்த மாவு கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போதே, மீன் வடிவத்தில் உருட்டவும். இதனை, தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள், இப்படி செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதன் மூலம் அனைத்துச் சத்துக்களும் கிடைக்கும்.
—————————————————-
கீரை கோஃப்தா கறி
தேவையானவை: ஆய்ந்து, நன்கு அலசி, நறுக்கிய கீரை – ஒரு கட்டு, பனீர் (துருவியது) – 100 கிராம், உருளைக்கிழங்கு – 1, வெங்காயம் – 1, முந்திரி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், வெங்காய விழுது – கால் கப், சீரகம் – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தயிர் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: கீரையை வேக வைக்கவும். துருவிய பனீர், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயம், உப்பு ஆகியவற்றை கீரையுடன் சேர்த்து கலந்து உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு அதில் கீரை உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். இன்னொரு கடாயில், எண்ணெய் விட்டு அதில் முந்திரி பேஸ்ட், வெங்காய விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி தயிர் சேர்த்துக் கலக்கவும். அதில் பொரித்த கோஃப்தா உருண்டைகளை சேர்த்து வதக்கி, எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு: அதிக கலோரியும் சத்தும் நிறைந்த இந்த உணவை எப்போதாவது ஒருமுறை செய்து உண்ணலாம். இதை உண்ட பிறகு, அடுத்த வேளை உண்ணும் உணவு லைட்டாக இருத்தல் நலம்.
———————————————–
கீரை ரொட்டி
தேவையானவை: அரிசி மாவு – கால் கிலோ, ஆய்ந்த கீரை – ஒரு கப், வெங்காயம் – 1, மைதா – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: ஆய்ந்த கீரையையும் வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளவும். அரிசி மாவு, மைதா, நறுக்கிய கீரை, வெங்காயம், உப்புடன் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். அதனை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். அவற்றை சப்பாத்திக் கல்லில் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு ரொட்டிகளாகச் சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: கீரையை எப்போதும் ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல், இதே போல் செய்து சாப்பிடலாம். காலை, மாலை டிபனுக்கு உகந்த உணவு!
————————————————–
மிக்ஸட் ரொட்டி காய்கறி சட்னி
தேவையானவை: சோயா மாவு, மைதா மாவு, கம்பு மாவு, சோள மாவு – தலா 100 கிராம், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிஃப்ளவர் கலவை – ஒரு கப், இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 3 பல், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: எல்லா மாவையும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு நன்கு பிசையவும். சிறிது நேரம் கழித்து ரொட்டிகளாக சப்பாத்திக் கல்லில் தேய்க்கவும், ரொட்டிகளை தவாவில் இட்டு, எண்ணெய் விடாமல் சுட்டு எடுத்தால், பலவித சத்துக்கள் நிறைந்த மாவுகள் கொண்ட மிக்ஸட் ரொட்டி தயார்.
கடாயில் எண்ணெய் விட்டு, கொடுத்துள்ள காய்கறிகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆற வைத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனை மிக்ஸட் ரொட்டிக்குத் தொட்டுச் சாப்பிடலாம்.
குறிப்பு: இந்த காம்பினேஷனில் அனைத்து விட்டமின்களும் சத்துக்களும் சரியாகக் கலந்துள்ளன. டயட்டில் இருப்பவர்கள், சத்துக் குறைபாடு உள்ளவர்கள் இதனை அடிக்கடி செய்து சாப்பிட்டு வர, பலன் கிடைக்கும்.
———————————————————
நூல்கோல் சப்பாத்தி
தேவையானவை: நன்கு கழுவி மெல்லியதாக நறுக்கிய நூல்கோல் – ஒரு கப், கோதுமை மாவு – அரை கிலோ, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 1, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: நூல்கோலை வேக வைக்கவும். கோதுமை மாவில் உப்பு, கொஞ்சம் எண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து, ஈரத் துணியால் 15 நிமிடம் மூடி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வேக வைத்த நூல்கோல் சேர்த்து மேலும் வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் சுருள வதக்கவும். பிசைந்த மாவில் கொஞ்சம் எடுத்து கிண்ணம் போல் செய்து, அதற்குள் வதக்கிய நூல்கோலை கொஞ்சம் வைத்து சப்பாத்திகளாக தேய்த்து, கல்லில் போட்டு எண்ணெய் விடாமல் சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: நூல்கோல் காயை அதிகம் விரும்பிச் சாப்பிடாதவர்கள், இதேபோல் செய்து சாப்பிடலாம். உடல் எடையைக் குறைப்பதில் நூல்கோலுக்கு முக்கிய இடம் உண்டு.
———————————————–
நவரத்தின புலாவ்
தேவையானவை: சாமை அரிசி (பெரிய மளிகைக் கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் – தலா 1, நறுக்கிய கேரட், காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி, குடமிளகாய், பீன்ஸ் கலவை – ஒரு கப், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சுத்தம் செய்த சாமை அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நீளமாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஊற வைத்த சாமை அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து, இதனுடன் சேர்க்கவும். ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரில் வைத்து மூடவும். மிதமான தீயில் வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை வதக்கவும். குக்கரில் ஆவி போனதும், மூடியைத் திறந்து வதக்கிய காய்கறிகளை சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.
குறிப்பு: பாசுமதி அரிசியில் செய்யப்படும் புலாவுக்கு இணையான சுவையுடன் கூடிய இந்த புலாவ், குறைந்த கலோரிகளில் அதிக சத்து நிறைந்தது.
———————————————————————-
கலர்ஃபுல் புட்டு
தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் துருவல், கேரட் துருவல், ஆய்ந்து நறுக்கிய கீரை – தலா அரை கப், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு புட்டு மாவு பதத்தில் பிசறிக் கொள்ளவும். புட்டுக்குழாயில் பிசறிய அரிசி மாவை முதலில் வைத்து, அதன் மேல் தேங்காய் துருவலை வைக்கவும். அடுத்த அடுக்கில் அரிசி மாவுடன் கேரட்டை சேர்த்துக் கலந்து வைக்கவும். அதன் மேல் தேங்காய் துருவலைத் தூவவும். அடுத்த அடுக்கில் அரிசி மாவில் போட்டுப் பிசறிய கீரையை வைக்கவும். அதன்மேல் கொஞ்சம் தேங்காய்த் துருவலை தூவவும். இதனை ஆவியில் வேக வைத்து, வெந்ததும் கம்பியால் புட்டை வெளியே எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு: கார்போஹைட்ரேட், விட்டமின், தாது உப்புக்கள் அதிகம் அடங்கிய, எண்ணெய் கலக்காத உணவு இது. எளிதில் ஜீரணமாகக் கூடியது என்பதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம்.
————————————————————-
தர்பூசணி மசாலா
தேவையானவை: தர்பூசணி – கால் கிலோ, தக்காளி – 3, வெங்காயம் – 2, பட்டை, கிராம்பு – தலா 2, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது, தேன் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தர்பூசணியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், அரைத்த வெங்காயம்-தக்காளி பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். கிரேவி பதம் வந்ததும், நறுக்கிய தர்பூசணியைச் சேர்த்துக் கலந்து, வெந்ததும் இறக்கவும். பரிமாறுவதற்கு முன், தேன் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: தர்பூசணியை பழமாக மட்டும் சாப்பிடாமல், இப்படி மசாலாவாகவும் செய்து சாப்பிடலாம். தேன் கலப்பதால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
———————————————————————-
முளைகட்டிய பயறு சாலட்
தேவையானவை: பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, கம்பு, கொள்ளு கலவை – ஒரு கப், எலுமிச்சம் பழம் – 1, வெங்காயம் – 1, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: எல்லா பயறுகளையும் தண்ணீரில் ஊற வைக்கவும். அவற்றைக் கழுவி, முதல் நாள் இரவே ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில் அவை முளை விட்டிருக்கும். முளைவிட்ட பயிர்களுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: புரோட்டீன், விட்டமின் சத்து நிறைந்த, கொழுப்பு சத்து இல்லாத இயற்கை வழி உணவு. காலை, மாலை நேர உணவாக இதை சாப்பிடலாம். நொறுக்குத் தீனி அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை உபாதை ஏற்பட்டு அவதிப்படுபவர்கள், இதை சாப்பிடலாம்.
——————————————————
பாகற்காய் அல்வா
தேவையானவை: பாகற்காய் – கால் கிலோ, காய்ச்சிய பால் – ஒரு கப், முந்திரி, உலர்ந்த திராட்சை – தலா 10, சுகர் ஃப்ரீ சர்க்கரை, நெய் – தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாகற்காயை மெல்லியதாக நறுக்கி, கொட்டை நீக்கி கழுவி, எலுமிச்சைச் சாறு சேர்த்து வேக விடவும். நன்கு வெந்தவுடன் வடிகட்டவும் (வடிகட்டிய நீரை சூப்பாகப் பயன்படுத்தலாம்). வெந்த பாகற்காயுடன் பால் சேர்த்து மீண்டும் குழைய வேக வைக்கவும். பாகற்காயும் பாலும் ஒன்றாகக் கலந்து நன்கு சுண்டியவுடன், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
குறிப்பு: பாகற்காயின் கசப்புக்கு அஞ்சி அதனைத் தொடாதவர்களுக்கு இப்படி செய்து கொடுக்கலாம். கசப்புத் தன்மையுள்ள காய்கறிகள் கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டவை.