முருங்கை கீரை கடலை உசிலி

முருங்கை கீரை கடலை உசிலி
Murungai-Keerai-Paruppu

Murungai-Keerai-Paruppu

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

இரத்தசோகையை குணமாக்கும் முருங்கை கீரை கடலை உசிலி

இரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் முருங்கை கீரையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று முருங்கை கீரை கடலை உசிலி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஆய்ந்த முருங்கைக்கீரை - ஒரு கப்,
வறுத்த வேர்க்கடலை - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 5,
கடுகு, பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

கீரையை நன்றாக சுத்தம் செய்து அலசி வைக்கவும்.

வேர்க்கடலையுடன் மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

அடுத்து அதனுடன் கீரை சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும்.



தண்ணீர் வற்றிய பிறகு அரைத்த பொடியை சேர்த்து கிளறி இறக்க முருங்கை கீரை கடலை உசிலி ரெடி.

தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி?

தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி?


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தோசை, இட்லி, சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தக்காளி - 1 கிலோ
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
சர்க்கரை (சீனி) - கொஞ்சம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

வெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து பொடித்து கொள்ளவும்.

தக்காளியைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத்தாளித்த பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி ஓரளவு வதங்கியதும் அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

தக்காளி ஓரளவு வதங்கியவுடன் சர்க்கரை (சீனி) யையும், வெந்தயப் பொடியையும் சேர்க்கவும். கலவையை சுவை பார்த்து, தேவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிடவும்.

தக்காளியில் உள்ள நீர் எல்லாம் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

சூப்பரான தக்காளி ஊறுகாய் ரெடி.



சூடு ஆறியபின் பாட்டில்களில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொள்ளவும். சில வாரங்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.

அரிசி கடலைப்பருப்பு உருண்டை

அரிசி கடலைப்பருப்பு உருண்டை

சத்து நிறைந்த அரிசி கடலைப்பருப்பு உருண்டை
Uppu-Urundai

   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

காலையில் டிபனாகவும், மாலையில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிட சத்தான உணவு இந்த அரிசி கடலைப்பருப்பு உருண்டை. இன்று இந்த உருண்டை செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - ஒரு கப்,
துருவிய இஞ்சி, மாங்காய் - சிறிதளவு,
ஊற வைத்த கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது - சிறிதளவு,
நெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

பச்சரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.

இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் நெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, உப்பு, துருவிய இஞ்சி, மாங்காய், பச்சை மிளகாய் - கொத்தமல்லி விழுது, பச்சரிசி ரவை சேர்த்துக் கைவிடாமல் கிளறி தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

பின்னர் இந்த மாவை உருண்டைகளாகப் பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

இதை சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ்

ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ்
sweet-corn-cheese-Nuggets



                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சூப்பரான ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ்

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ஸ்வீட் கார்ன், சீஸ் சேர்த்து நக்கட்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - 1 கப்
மக்காச்சோள மாவு - 4 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 1
பிரெட் தூள் - கால் கப்
சீஸ் துருவல் - கால் கப்
மைதா மாவு - கால் கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :

ஸ்வீட் கார்னை வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, சீஸ் துருவல், மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு, சேர்த்து நன்றாக பிசையவும்.

பிறகு மாவை விரும்பிய வடிவில் உருட்டி வைக்கவும்.

அகலமான தட்டில் மைதா மாவுடன், பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

உருட்டிய நக்கட்ஸ்களை மைதா கலவையில் புரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெயை காய விட்டு உருட்டி வைத்த நக்கட்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சூப்பரான ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ் ரெடி. சாஸ் உடன் பரிமாறவும்.

குதிரைவாலி கொள்ளு கஞ்சி

 குதிரைவாலி கொள்ளு கஞ்சி
kollu-rice-kanji

கொழுப்பை கரைக்கும் குதிரைவாலி கொள்ளு கஞ்சி


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்             


உடலில் உள்ள அதிகப்படியாக கொழுப்பை குறைக்கும் சக்தி கொண்டது கொள்ளு. இன்று கொள்ளுவை வைத்து சத்தான கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - 1 கப்,
கொள்ளு - அரை கப்,
உப்பு - தேவைக்கு.

செய்முறை :

கொள்ளுவை வெறும் வாணலியில் வறுத்து நீரில் மூழ்கும் வரைப் போட்டு 2 மணி நேரம் ஊறவிடவும்.

குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் அதை குக்கரில் போட்டு அதனுடன் கொள்ளுவை போட்டு மூழ்கும் அளவிற்கு மேல் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.

நன்கு குழைய வெந்ததும் அதில் கடைந்து அடுப்பில் வைத்து மேலும் நீர் சேர்த்து கிளறிவிட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

சூப்பரான குதிரைவாலி கொள்ளு கஞ்சி ரெடி

இனிப்பு சமோசா

இனிப்பு சமோசா

குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா


       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

        
பலவிதமான மசாலாவில் செய்த சமோசாவை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மைதா மாவு - ஒரு கப்
உப்பு - ஒரு சிட்டிகை
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் - அரை கப்
பன்னீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
வறுத்த பிரெட் தூள் (Toasted bread crumbs) - கால் கப்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
உடைத்த நட்ஸ் (அக்ரூட், பாதாம் முந்திரி) - 2 டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை :

மைதா மாவுடன் உப்பு, ஆலிவ் எண்ணெய், ஃபுட் கலர் சேர்த்து ஐஸ் வாட்டர் தெளித்துக் கெட்டியாகச் சப்பாத்தி மாவுப் பதத்துக்கு நன்றாக அடித்துப் பிசையவும்.

இந்த மாவின் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி ஈரத்துணியில் சுற்றி அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

தேங்காய்த் துருவலுடன் பன்னீர் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உடைத்த நட்ஸ் வகைகள், வறுத்த பிரெட் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே இனிப்புப் பூரணம்.

பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி நீளவாக்கில் சப்பாத்தியாகத் தேய்க்கவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, சூடானதும் இந்தச் சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் லேசாக... அதாவது அரை நிமிடம் சூடு செய்து எடுக்கவும். (முழுவதும் வேகவிடக் கூடாது).

இதன்மீது ஈரத்துணியை வைத்து மூடவும் (அப்படியே வைத்தால் காய்ந்துவிடும்; சமோசா மடிக்க வராது. தேவைப்படும்போது பயன்படுத்தலாம்).

பிறகு, சப்பாத்திகளை இரண்டாக நீளவாக்கில் வெட்டவும். ஓரம் முழுவதும் தண்ணீர் தடவவும். நேர்க்கோடாக இருக்கும் பகுதியை நடுவில் கொண்டுவந்து முக்கோணம் போல் செய்து மைதா பசையால் ஒட்டவும்.

இதன் நடுவே சிறிதளவு இனிப்புப் பூரணம் வைத்து ஓரங்களை அழுத்தி ஒட்டி மூடவும். மீதமுள்ள சமோசாக்களையும் இதே மாதிரி தயாரிக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, தயாரித்த சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

சூப்பரான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா ரெடி.

ரகடா பட்டீஸ்

ரகடா பட்டீஸ்
சூப்பரான சாட் ரகடா பட்டீஸ்


       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

        
வடஇந்திய உணவு வகைகளில் ஒன்றான ரகடா பேட்டீஸ் இனிப்பும் புளிப்புமான ஒரு சிற்றுண்டி. பட்டாணியில் செய்யும் ரகடாவை பேட்டீஸ் உடன் சேர்த்து சாப்பிடும்போது இனிப்பும் புளிப்புமாக அருமையாக இருக்கும்.

பேட்டீஸ்:

தேவையான பொருட்கள் :

உருளை கிழங்கு - கால் கிலோ
பிரட்  - 3 ஸ்லைஸ்
பூண்டு - சிறிதளவு
சோள மாவு - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள்  - அரை ஸ்பூன்

செய்முறை :

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.

பிரட்டை மிக்சியில் போட்டு உதிர்த்து கொள்ளவும்.

பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக மசித்த பின்னர் அதனுடன் உதிர்த்த பிரட், பொடியாக நறுக்கிய பூண்டு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும்.

அடுப்பில் தவாவை வைத்து சூடானவுடன் உருண்டைகளை தட்டையாக தட்டி எண்ணெய் தடவிய தவாவில் போட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு மொறு மொறுப்பாக சிவந்தவுடன் எடுத்து வைக்கவும். சூப்பரான பேட்டீஸ் தயார்.

ரகடா :

தேவையான பொருட்கள் :

பட்டாணி - ஒரு கப்
வெங்காயம்   - ஒன்று (பெரியது)
கரம்மசாலா தூள்  - 2 ஸ்பூன்
தக்காளி சாஸ்   - தேவையான அளவு
லெமன் ஜூஸ்  - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு
சர்க்கரை - அரை ஸ்பூன்
இஞ்சி  - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :

பட்டாணியை குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து முக்கால் பாகத்தை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை போட்டு சுருள வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கரம்மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.

மிக்சியில் இஞ்சி, பூண்டு, மீதமுள்ள வெங்காயம், மீதிமுள்ள பட்டாணி சேர்த்து அரைக்க வேண்டும்.

அரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.

இறுதியில் கிரேவியில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி விட்டால் ரகடா தயார்.

பேட்டீஸ் மேல் ரகடாவை ஊற்றி அதன் மேல் ஓமப்பொடியை தூவி பரிமாறவும்.

சூப்பரான ரகடா பேட்டீஸ் ரெடி. 

துரித உணவுகளை சாப்பிடக் கூடாதுன்னு சொல்வதற்கான காரணங்கள்

துரித உணவுகளை சாப்பிடக் கூடாதுன்னு சொல்வதற்கான காரணங்கள்
fast-foods-avoid-reasons



             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

இன்று அதிகரித்துவரும் நோய்களின் பின்னணியில் முக்கிய காரணியாக துரித உணவுகள் இருக்கின்றன. என்னென்ன காரணங்களால் ஃபாஸ்ட் ஃபுட் உடல்நலனுக்குக் கேடானது என்று அறிந்து கொள்ளலாம்.

இயந்திர வாழ்க்கையின் அதிவேகம் காரணமாக துரித உணவுகள் பயன்பாட்டுக்கு வந்தன. சமைப்பது எளிது, வித்தியாசமான சுவை, குறைவான நேரம் என்ற காரணங்களால் துரித உணவுகளுக்கு மக்கள் மாறிவிட்டார்கள். ஆனால், இவ்வகை துரித உணவுகளில் எண்ணற்ற பிரச்னைகள் இருக்கின்றன. உணவின் சுவையை கூட்ட கலக்கப்படும் ரசாயனங்கள் முதல், சமைக்கும் முறை வரையிலும் பல பிரச்சனைகள் துரித உணவுகளில் இருக்கின்றன.

பீட்சா, பர்கர், நூடுல்ஸ் ஆகிய ஃபாஸ்ட் ஃபுட் வகைகளைத் தயாரிப்பதற்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களான, மீன், முட்டை மற்றும் காய்கறிகள், சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படும் புளி, தக்காளி, பச்சை மிளகாய் கலவை போன்றவை பல நாட்களுக்கு முன்னரே, சமைக்கப்பட்டு, பல நாட்கள் வரை கெட்டுப்போகாத வண்ணம் பதப்படுத்தப்பட்டு வைக்கப்படுகின்றன.

இவ்வாறு உடல் நலத்துக்குக் கேடும் ஏற்படுத்தும் வகையில் சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் தீமைகள்தான் அதிகம். இவற்றில் எந்தவிதமான
ஊட்டச்சத்தும் கிடைப்பது இல்லை. அதற்குப் பதிலாக கலோரிகள்தான் ஏராளமாக உள்ளன. கலோரிகள் மட்டுமே அதிகமாக காணப்படுகிற துரித வகை உணவுப்பண்டங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

எனவே, ஒரு நாளாக இருந்தாலும் சரி, பல நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதாக இருந்தாலும் சரி, சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள், முதியவர் என யாராக இருந்தாலும் இதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் எப்போதாவது ஒரு முறை சாப்பிடலாம். ஆனால், அதனை அன்றாட பழக்கமாக மாற்றும் போது பல உடல்நலக் கோளாறுகள் வரும்.

உச்சந்தலை முதல் அடிப்பாதம் வரை பாதிக்கப்படும். மன அழுத்தம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதனால், Sleep Apnea ஏற்படும். அதாவது, நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து, சோர்வு உண்டாகும். தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குறட்டை அதிகளவில் வெளிப்படும்.

இதயத்தில் கொழுப்பு படிவதால், ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், கல்லீரலில் கொழுப்பு ஏராளமாக சேர்ந்து, எரிச்சல் உண்டாகி சுருங்கும் வாய்ப்பு உண்டு. மேலும் மலச்சிக்கல், எலும்புகள் பலவீனம் ஆதல், எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை தவிர, பெருங்குடலில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


இன்று இட்லி, தோசை, புட்டு ஆகிய பாரம்பரிய உணவுப் பண்டங்கள் ஒதுக்கப்பட்டு பீட்சா, ஃப்ரென்ச் ஃப்ரை, பர்கர் என பலவிதமான துரித உணவு வகைகள் நம்முடைய வாழ்வில் என்றோ நுழைந்து விட்டன. பீட்சாவில் காய்கறிகள் குறைவாக இருக்கும்.

பர்கர் என்று பார்க்கும்போது, இதை செய்வதற்குத் தினமும் சாப்பிடுகிற சிறிய பன் போதுமானது. ஆனால், அன்றாடம் நாம் சாப்பிடுகிற பன்னைவிட, பர்கர் செய்ய பயன்படுத்தப்படும் பன் 3 அல்லது 4 மடங்கு அளவில் பெரியதாக காணப்படும். இதிலும், மீன், மட்டன், பீன்ஸ், கேரட், கோஸ் போன்ற காய்கறிகள் கொஞ்சமாகத்தான் சேர்க்கப்படுகின்றன. எண்ணெயில் பல தடவை நன்றாக பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளைத்தான் ஃப்ரென்ச் ஃப்ரை என்ற பெயரில் ஃபாஸ்ட் ஃபுட்டாக சாப்பிடுகிறோம்.

பொதுவாக, இந்த வகை உணவுப்பண்டங்களில் மைதா, கொழுப்பு சத்து போன்றவைதான் அளவுக்கு அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த உணவில் சேர்க்கப்படும் பாலாடைக்கட்டி (Cheese) கொழுப்பின் அளவு அதிகரிக்க வழி செய்கிறது. பீன்ஸ், கேரட், கோஸ் போன்ற காய்கறிகள் இவற்றுடன் குறைவாகவே சேர்த்து தரப்படுகின்றன.

உணவகங்களில், நூடுல்ஸ், பீட்சா, பர்கர் என சாப்பிடும்போது குளிர்பானங்களையும் குடிக்கின்றனர். இந்த குளிர்பானங்களில் அதிக சர்க்கரை, கார்பன் டை ஆக்ஸைடு, சில ரசாயன கலவைகள் போன்ற உடலுக்குக் கெடுதியான விஷயங்களே இருக்கின்றன. ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடாதவர்களுக்கு இந்த குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் பொதுவாக இருப்பதில்லை.

இதன் காரணமாகவும் ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்க்க வேண்டும். நமது முன்னோர்கள் பின்பற்றிய உணவு முறையை இப்போது யாரும் பின்பற்றுவது இல்லை. அந்த உணவுப் பழக்கத்துக்கு மாறினால் உடல் ஆரோக்கியம் சீராகும்.

ராஜ்மா பன்னீர் மசாலா

ராஜ்மா பன்னீர் மசாலா



             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

அருமையான ராஜ்மா பன்னீர் மசாலா

ராஜ்மா, பன்னீர் கறியை சாதம் அல்லது பராத்தா, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ராஜ்மா  - ஒன்றரை கப்,
பன்னீர் - 150 கிராம்,
வெங்காயம் - 2 (நடுத்தரமான அளவில்),
தக்காளி - 2,
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - இரண்டு டீஸ்பூன்,
மஞ்சள் போடி - அரை டீஸ்பூன்,
மிளகாய்ப் பொடி - அரை டீஸ்பூன்,
மல்லிப்பொடி - 1 டீஸ்பூன்,
சீரகப்பொடி - அரை டீஸ்பூன்,
கரம் மசாலா - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

இரவே ராஜ்மாவை ஊறவைக்க வேண்டும். ஊறிய ராஜ்மாவைத் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, வேகவைத்து கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயம், சீரகப்பொடி சேர்த்து, வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

கடைசியாக பன்னீர் துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, வேகவைத்த ராஜ்மா மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வரை வேகவைத்து இறக்கவும்.

சூப்பரான ராஜ்மா பன்னீர் கறி ரெடி.

இந்த ராஜ்மா பன்னீர் கறியை வேகவைத்த அரிசி சாதம் அல்லது பராத்தா, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

வெஜிடபிள் உருண்டை

 வெஜிடபிள் உருண்டை
மாலை நேர டிபன் வெஜிடபிள் உருண்டை



             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


உப்பு உருண்டை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த உப்பு உருண்டையில் காய்கறிகள் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி - 2 கப்,
கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப்,
வெங்காயம் - 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
தேங்காய் துருவல் - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 3,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, கேரட், பீன்சை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு. கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், பீன்ஸ் சேர்த்து, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து வதக்கி, ஒரு கப் அரிசிக்கு இரண்டரை கப் என்ற அளவில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

இதில் தேங்காய் துருவல், அரிசி ரவை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, ஆறியதும் சின்ன உருண்டைகளாக பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

இப்போது சுவையான சத்தான வெஜிடபிள் உருண்டை ரெடி.

பன்னீர் பொடிமாஸ்

பன்னீர் பொடிமாஸ்
சப்பாத்திக்கு அருமையான பன்னீர் பொடிமாஸ்



             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



சப்பாத்தி, நாண், பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பன்னீர் பொடிமாஸ். இன்று இந்த பொடிமாஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பன்னீர் - 200 கிராம்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 2 பல்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

பன்னீரை உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.

பூண்டை நசுக்கி கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கிய பின்னர் நசுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல் உப்பு சேர்க்கவும்.

பிறகு, அதில் உதிர்த்து வைத்துள்ள பன்னீர், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சூப்பரான பன்னீர் பொடிமாஸ் ரெடி.