Showing posts with label அம்மிணிக் கொழுக்கட்டை. Show all posts
Showing posts with label அம்மிணிக் கொழுக்கட்டை. Show all posts

அம்மிணிக் கொழுக்கட்டை

அம்மிணிக் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், தண்ணீர் - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, ஊறவைத்த கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, நல்லெண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதித்து வரும்போது தீயைக் குறைத்துவிட்டு, மாவைத் தூவிக் கட்டி தட்டாமல் கிளறவும். நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். மாவை மூடி வைக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து மாவை கட்டி இல்லாமல் பிசைந்து கையில் எண்ணெயைத் தொட்டுக்கொண்டு பட்டாணி அளவுக்குச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் ஊறிய கடலைப்பருப்பு சேர்க்கவும். பிறகு பெருங்காயத்தூளைப் போட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் வேகவைத்திருக்கும் அம்மிணிக் கொழுக்கட்டைகளைப் போட்டுக் கிளறவும். இறக்கும் முன்பாக தேங்காய்த் துருவலை சேர்த்துக் கலந்து இறக்கவும்.

அம்மிணிக் கொழுக்கட்டை

அம்மிணிக் கொழுக்கட்டை

தேவையானவை:
பச்சரிசி மாவு- 1 டம்ளர்
உப்பு- தேவையான அளவு
தேங்காய்த்துருவல்- 3 தேக்கரண்டி
காரப்பொடி – சிறிதளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
செய்முறை:
1. அரிசிமாவைச் சிவக்க வறுக்கவும்.
2. தனியொரு பாத்திரத்தில் தண்ணீரைச் சூடுபடுத்தவும். உப்பும் சேர்க்கவும்.
3. அரிசி மாவு கெட்டியாகும் வரைச் சிறிது சிறிதாகத் தண்ணீரை ஊற்றிக் கிளறவும்
4. மாவு கெட்டியானதும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
5. கொழுக்கட்டைகள் வேகுவதற்குள் வாணலியில் எண்ணெயிட்டுத் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொள்ளவும்.
6. வெந்த கொழுக்கட்டைகளைத் தாளிசப் பொருட்களுடன் சேர்க்கவும்.
7. காரப் பொடியைச் சிறிதளவு சேர்த்து பிரட்டவும்(பச்சைமிளகாயும் சேர்ப்பதால் காரப்பொடியைச் சிறிதளவே சேர்க்க வேண்டும்)
8. காரக்கொழுக்கட்டையில் வேக வைக்கும் முன்பு வதக்கும் போது காரப்பொடி சேர்ப்போம், அது ஒரு சுவை, இது வெந்து கொழுக்கட்டைகளை வதக்கி அப்போது சேர்ப்போம், இது ஒரு சுவை.
சற்றுப் பொறுமையுடன் செய்ய வேண்டிய முறை:
1. பச்சரிசி இரண்டு கப் எடுத்து கழுவி தண்ணீர் விட்டு ஒரு 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
2. நீரை வடிகட்டி அப்படியே பிசிறி வைக்கவும்.
3. அரை மணி நேரத்திற்குப் பிறகு எடுத்து ஒரு வெள்ளைத் துண்டில் பரப்பி ஆற விடவும். பத்து நிமிடங்கள் கழித்து மின்னரைப்பானில் நன்றாகப் பொடிக்கவும். மாவு மிகப் பொடியாக இருக்க வேண்டியது அவசியம்.
4.வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் 4 கப் நீர் விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும்.
5. கொதி வந்ததும் பொடித்த மாவைத் தூவி கட்டி இல்லாமல் கிளறவும்.
6. மாவு நன்றாக சுருண்டு ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.
7. சிறிய உருண்டைகளாக்கி மேற்கூறிய முறையில் வேக வைத்துத் தாளித்துப் பரிமாறவும்.
8. நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் இம்முறையில் செய்யலாம், இல்லாதவர்கள் பச்சரிசி மாவிலேயே செய்து கொள்ளலாம், அதுவும் நன்றாக வரும்.