Showing posts with label பனீர் புர்ஜி (பனீர் தக்காளி மசாலா). Show all posts
Showing posts with label பனீர் புர்ஜி (பனீர் தக்காளி மசாலா). Show all posts

பனீர் புர்ஜி (பனீர் தக்காளி மசாலா)

பனீர் புர்ஜி (பனீர் தக்காளி மசாலா)

தேவையானவை

வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய
வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
பனீர் - 150 கிராம்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:

பனீரை நன்கு கழுவி, துருவி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் சேர்த்து உருக விடவும். வெண்ணெய் உருகியதும், சீரகம் போட்டு பொரிய விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி நன்கு கரையும் வரை வதக்கிக்கொள்ளவும். இதில், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேக விட்டு, துருவி வைத்திருக்கும் பனீரைச் சேர்த்துக் கிளறி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.