Showing posts with label பனீர் இனிப்பு போளி. Show all posts
Showing posts with label பனீர் இனிப்பு போளி. Show all posts

பனீர் இனிப்பு போளி

பனீர் இனிப்பு போளி

தேவையான பொருட்கள் :

மைதா-ஒரு கோப்பை
கோதுமை மாவு-ஒரு கோப்பை
எண்ணெய்-இரண்டு தேக்கரண்டி
உப்புத்துள்- ஒரு சிட்டிகை
துருவிய பனீர்- முக்கால் கோப்பை
துருவிய தேங்காய்- அரைகோப்பை
வெல்லம்-1/2 கோப்பை
ஏலக்காய்-நான்கு
பொடித்த முந்திரி -காலக் கோப்பை
நெய்/எண்ணெய்- தேவைக்கேற்ப

செய்முறை :

1.மாவை ஒன்றாக கலந்து அதில் உப்பு மற்றும் எண்ணெயை ஊற்றி நீரைத் தெளித்து சப்பாத்திக்கு பிசைவதுப் போல் பிசைந்து குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

2.மிக்ஸியில் வெல்லதுடம் ஏலக்காயைச் சேர்த்து நன்கு பொடித்து வைக்கவும்

3.வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி அதில் துருவிய பன்னிரைப் போட்டு ஈரம் போக வறுத்து தனியே ஆற வைக்கவும் .

4.பின்பு அதே வாணலியில் தேங்காயை கொட்டி இளஞ் சிவப்பாக வறுத்து ஆறவைத்து அதையும் பன்னீரில் கொட்டி கலக்கவும்.

5.பின்பு அதில் பொடித்த சர்க்கரை மற்றும் முந்திரி பொடியையும் சேர்த்து நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும்.

6.பிறகு பிசைந்து வைத்த மாவிலிருந்து ஒரு எலுமிச்சையளவு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வட்டமாக இட்டு அதன் நடுவில் சிறிது பூரணத்தை வைத்து மூடி இலேசாக அழுத்தி மீண்டும் தேய்த்து வைக்கவும்.

7.இவ்வாறு அனைத்து மாவையும் போளியாக இட்டு வைக்கவும்.

8. தோசை தவாவை அடுப்பில் வைத்து தயாரித்து வைத்துள்ள போளியைப் போட்டு இரண்டு புறமும் நெய்யை தடவி வேக வைத்து தீயாமல் சுட்டெடுக்கவும்.