Showing posts with label வெந்தயக்கீரை சாம்பார். Show all posts
Showing posts with label வெந்தயக்கீரை சாம்பார். Show all posts

வெந்தயக்கீரை சாம்பார்

உடல் குளிர்ச்சி தரும் வெந்தயக்கீரை சாம்பார் செய்வது எப்படி ...!!

உடல் குளிர்ச்சி மற்றும் குடல் புண்களை ஆற்றும் வெந்தயக்கீரை சாம்பார்..

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை – 2 சிறுகட்டு,
துவரம்பருப்பு – ஒரு கப்,
புளி – எலுமிச்சைப் பழ அளவு,
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.

* புளியை கரைத்து கொள்ளவும்.

* வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும்.

* வாணலியில் கரைத்த புளியைக் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்கவிட்டு, கீரை வெந்ததும் வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும்.

* எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: வெந்தயக்கீரை குளிர்ச்சி தரும்; வயிற்றுப்புண் ஆற்றும்.

வெந்தயக்கீரை சாம்பார்

வெந்தயக்கீரை சாம்பார்

தேவையானவை:

வெந்தயக்கீரை – மூன்று கட்டு,
புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு கப்,
கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெந்தயக் கீரையை ஆய்ந்து, நன்கு அலசி, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.

துவரம்பருப்பை குழைய வேக வைக்கவும்.

புளியை 250 மில்லி தண்ணீர் விட்டு கரைத்து, உப்பு, சாம்பார் பொடி, வதக்கிய வெந்தயக்கீரை சேர்த்துக் கொதிக்கவிடவும்.

இதனுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து… கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.

குறிப்பு:

வெந்தயக் கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும்